ஆப்நகரம்

Suriya:சூர்யாவுக்காக இரவு 11.30 மணி சாப்பிடாமல் காத்திருந்த பிரபலம்: அது ஜோ இல்ல

சூர்யாவுக்காக இரவு 11.30 மணி வரை சாப்பிடாமல் காத்திருந்த பிரபலம் குறித்து ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 29 Nov 2022, 1:59 pm
சூர்யாவுக்காக இரவு 11.30 மணி ஆகியும் சாப்பிடாமல் தன் ஹோட்டல் அறை கதவை திறந்து வைத்து காத்திருந்த பிரபலம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
Samayam Tamil when prabhas waited for suriya till 11 30 in the night
Suriya:சூர்யாவுக்காக இரவு 11.30 மணி சாப்பிடாமல் காத்திருந்த பிரபலம்: அது ஜோ இல்ல



சூர்யா

படங்களில் பிசியாக இருக்கும் சூர்யா ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றிருக்கிறார். பிரபாஸ், சூர்யாவின் படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடந்திருக்கிறது. சூர்யாவை பார்த்த பிரபாஸ் அவரிடம் பேசியதுடன் டின்னருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் சொன்னபடி சரியான நேரத்திற்கு சூர்யாவால் சாப்பிட வர முடியவில்லை. இருப்பினும் பிரபாஸ் பொறுமையாக காத்திருந்திருக்கிறார். இது குறித்து சூர்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டின்னர்

சூர்யா கூறியதாவது, ஃபிலிம் சிட்டியில் பிரபாஸை சந்தித்தேன். நான் காத்திருக்கிறேன். இன்று இரவு இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் சார் என்றார். சரி என்றேன். ஹோட்டல் சாப்பாடு அல்லது ப்ரொடக்ஷன் சாப்பாடு என்று நினைத்தேன். மாலை 6 மணிக்கு முடிய வேண்டிய என் பட ஷூட்டிங் 8 மணி, 10 மணி என்று இரவு 11.30 மணி ஆகிவிட்டது. பிரபாஸ் காத்திருந்திருப்பார், நாளை அவரை சந்தித்து சாரி சொல்லிவிடலாம் என்று நினைத்தேன் என்றார்.

பிரியாணி

சூர்யா மேலும் கூறியதாவது, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றேன். காரிடரில் நடந்து சென்றபோது பிரபாஸ் அறையின் கதவு திறந்திருந்தது. என்னை பார்த்ததும் வெளியே வந்து, சார் நான் ரெடி, நீங்கள் குளித்துவிட்டு வாங்க என்றார். நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன். இரவு 11.30 மணி. அவர் சாப்பிடவில்லை. எனக்காக காத்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் அம்மா சமைத்த உணவுடன் காத்திருந்தார். அவர் அம்மா சமைத்த பிரியாணியை சாப்பிட்டேன். அது போன்ற சுவையான பிரியாணியை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை என்றார்.

பிரபாஸ்

தன்னுடன் சேர்ந்து நடிப்பவர்களுக்கு தன் அம்மா கையால் சமையல் செய்ய வைத்து சுவையான உணவு கொடுத்து அசத்துவதற்கு பெயர் போனவர் பிரபாஸ். முன்னதாக ஸ்ருதி ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோருக்கும் தன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுத்து அவர்களை அசத்திவிட்டார். இந்நிலையில் சூர்யாவுக்காக உணவு கொண்டு வந்ததும் இல்லாமல், இரவு 11.30 மணி வரை சாப்பிடாமல் காத்திருந்தது தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

க்ரிட்டி சனோன்

ஓம் ரவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ். அந்த படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனை பிரபாஸ் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த அனுஷ்கா ஷெட்டியின் ரசிகர்கள் கோபமும், வருத்தமும் அடைந்திருக்கிறார்கள்.

Prabhas: 'பரமசுந்தரி'யை மணக்கும் பிரபாஸ்?: அப்போ அனுஷ்கா?!


எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்