ஆப்நகரம்

ரஜினிக்கே 'நோ' சொன்ன ப்ரித்விராஜ்: ஏன் தெரியுமா?

ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை ஏன் ஏற்கவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ப்ரித்விராஜ்.

Samayam Tamil 27 Dec 2019, 3:23 pm
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருபவர் ப்ரித்விராஜ். அவர் கடந்த மார்ச் மாதம் வெளியான லூசிஃபர் என்கிற மலையாள படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். மோகன்லால் நடித்த லூசிஃபர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு படத்தை இயக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil rajinikanth


இந்நிலையில் அவர் ரஜினிகாந்தை இயக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

லூசிஃபர் ரிலீஸான உடன் ரஜினிகாந்த் சாரின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஆடுஜீவிதம் படத்தால் என்னால் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. இதையடுத்து ரஜினி சாருக்கு சாரி சொல்லி கடிதம் எழுதினேன். என் வாழ்க்கையில் நான் ஒருவருக்கு சாரி சொல்லி எழுதிய நீளமான கடிதம் அது தான் என்றார்.

வாம்மா ராசாத்தி: கீர்த்தியை பாராட்டி கேக் ஊட்டிவிட்ட ரஜினி

ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க எத்தனையோ இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தும் ஏற்க முடியாததை நினைத்து ப்ரித்விராஜ் வருத்தம் அடைந்துள்ளார்.

ப்ரித்விராஜ் மூன்று மாதங்கள் பிரேக் எடுத்து ஆடுஜீவிதம் படத்திற்கு தயாராகப் போகிறாராம். பிளெஸ்ஸி இயக்கும் ஆடுஜீவிதம் படத்தில் அமலா பால், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

மகள் லோஸ்லியா பற்றி ட்வீட் போட்ட வேகத்தில் நீக்கிய சேரப்பா

அடுத்த செய்தி

டிரெண்டிங்