ஆப்நகரம்

VJ Chitra:தூக்கு போட்டதும் அதை அவிழ்க்க முயன்று முடியாமல் இறந்த விஜே சித்ரா

விஜே சித்ரா உடம்பில் இருந்த நகக் கீறல்கள் எப்படி வந்தது என்பது தெரிய வந்திருக்கிறது.

Samayam Tamil 22 May 2022, 10:27 am
விஜே சித்ரா மரணம் குறித்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
Samayam Tamil when vj chitra tried to live but
VJ Chitra:தூக்கு போட்டதும் அதை அவிழ்க்க முயன்று முடியாமல் இறந்த விஜே சித்ரா



விஜே சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வி.ஜே. சித்ரா. அவர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல கொலை என்று கூறி வருகிறார் சித்ராவின் அம்மா.

தற்கொலை

சித்ராவின் மரணம் குறித்து பிரபல பத்திரிகையில் வந்த செய்தி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவர் கூறியதாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பட்டுச் சேலையால் சித்ரா தூக்கு போட்டிருக்கிறார். தூக்கு பின்பக்கமாக போட்டதால் கழுத்தின் முன்பகுதியில் அடையாளம் இல்லை என்றார்.

முடியவில்லை

அந்த முன்னாள் மருத்துவர் மேலும் கூறியதாவது, தூக்கு போட்டதுமே சித்ரா தன் மனம் மாறி அதை அவிழ்க்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் முடியவில்லை. அந்த போராட்டத்தின்போது சித்ராவின் நகம் தான் அவர் கழுத்தில் கீறியிருக்கிறது என்றார்.

ரேகா நாயர்

விஜே சித்ரா பற்றி நடிகை ரேகா நாயர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வந்தார். அவை எல்லாம் பொய் இல்லை. உண்மை தான். சித்ராவுக்கு கஞ்சா, மது, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் இறந்த அறையில் இருந்த கைப்பையில் கஞ்சா அடங்கிய 15 சிகரெட்டுக்கள் இருந்தது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்