ஆப்நகரம்

Nayanthara: இது என்னடா நயன்தாராவுக்கு வந்த சோதனை: வருத்தத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படம் இதுவரை எந்த ஷோவும் ரிலீச் ஆகாததால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Samayam Tamil 2 Aug 2019, 12:51 pm
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன் தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகின்றனர். ஹீரோவுடன் இணைந்து நடித்தாலோ அல்லது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்தாலோ அந்தப் படத்தை ஹிட் கொடுப்பதிவில் வல்லவர்.
Samayam Tamil nayan 2


இதுவரை இவரது நடிப்பில் வந்த ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களான, மாயா, டோரா, அறம், இமைக்கா நொடிகள், ஐரா என்று பல மாஸ் படங்களில் நடித்துள்ளார். இதில், ஐரா மட்டும் வசூல் ரீதியாக பாதிக்கப்பட்ட படமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில், இவருடன் இணைந்து பிரதாப் போத்தன், பூமிகா சாவ்லா, ரோஹினி ஹட்டங்கடி ஆகியோர் நடித்துள்ளனர்.

Tamil Movies: கொலையுதிர் காலம், ஜாக்பாட் உள்பட ஒரே நாளில் 12 படங்கள் ரிலீஸ்!


கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. முதலில் யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக இருந்தார். அதன் பிறகு, அவர், இந்தப் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதோடு, தயாரிப்பாளராகவும் இருந்த நிலையில், அதிலிருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து, பாலாஜி குமார் தனது தாயார் பெயரில் உரிமம் பெற்றுள்ள கொலையுதிர் காலம் என்ற டைட்டிலில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே இப்படத்தை இதே டைட்டிலில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்தார்.

அடம்பிடிக்கும் பிரபல பிஸினஸ்மேன்: நயன்தாராவுக்கு 10 கோடி?


இதற்காக, அவருக்கு ரூ.10 லட்சம் வரை காப்புரிமைக்காக கொடுக்கப்பட்டுள்ளதாக விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசினார். இறுதியில், படம் வெளியாகும் போது எங்கிருந்து ஆப்பு வந்தது போல படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara: பிரச்சனை மேல் பிரச்சனை: மீண்டும் தள்ளிப்போன நயன்தாராவின் கொலையுதிர் காலம்!

கொலையுதிர் காலம் வெளியீடு பிரச்சனைக்கு நீதிமன்றம் ஒரு காரணமில்லை என்றும், உண்மையில், பட வியாபாரம் பிரச்சனை காரணமாகவே படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.

முதலில் இப்படம் மே மாதம் வெளியாக இருந்தது. அதன் பிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்புறம் ஜூலை மாதத்திற்கு வந்தது. இப்போது ஆகஸ்ட் மாதத்திற்கு வந்துவிட்டது. இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் ஒரு திரையரங்கில் கூட படம் வெளியாகவில்லை. ஆனால், படத்திற்கான டிக்கெட் புக்கிங் மட்டும் நடந்து வருகிறது. இப்படத்திற்கான போஸ்டரில் படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என்றும், ஒரு சில போஸ்டர்களில் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், விக்கிப்பீடியா பக்கத்தில் படம் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நயன்தாராவின் கொலையுதிர் காலம் எப்போது தான் வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் வருத்தத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், படம் வெளியாகவில்லை என்பதால், படத்திற்கான டிக்கெட் புக்கிங்கை ரசிகர்கள் ரத்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்