ஆப்நகரம்

பாகுபலியில் முதலில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் எது தெரியுமா?

பாகுபலி கதையில் முதலில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் எது? என்பது குறித்த தகவலை இயக்குநர் ராஜமெளலி வெளியிட்டுள்ளார்.

TNN 6 May 2017, 3:24 pm
பாகுபலி கதையில் முதலில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் எது? என்பது குறித்த தகவலை இயக்குநர் ராஜமெளலி வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil which is the first character narrate in baahubali
பாகுபலியில் முதலில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் எது தெரியுமா?


பாகுபலி படத்தின் கதாசிரியர், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் . முதன் முதலில் பாகுபலி கதையை தனது தந்தை கூறும் போது, சிவகாமி கதாபாத்திரத்தை விவரித்ததாக ராஜ மெளலி தெரிவித்துள்ளார். சிவகாமி கதாபாத்திரத்தை கேட்டவுடன் அந்த கதாபாத்திரம் தன்னை தூங்க விடாமல் செய்ததாகவும் ராஜமெளலி மனம் திறந்துள்ளார்.

சிவகாமிக்கு அடுத்தபடியாக கட்டப்பா, பல்லாள தேவன், பிஜில் தேவன் ஆகிய கதாபாத்திரங்களை தனது தந்தை விவரித்ததாகவும், இறுதியாகவே பாகுபலி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாகவும் ராஜ மெளலி கூறியுள்ளார்.

சிவகாமி மற்றும் கட்டப்பா கதாபாத்திரங்கள் தான், இந்த கதையை பிரம்மாண்டமான திரைப்படமாக எடுக்க வேண்டும் என ராஜமெளலிக்கு உத்வேகம் அளித்ததாம்.

which is the first character narrate in Baahubali?

அடுத்த செய்தி

டிரெண்டிங்