ஆப்நகரம்

‘துப்பாக்கி’ படத்தைப் பார்த்து நண்பன் கேட்ட கேள்வியால் வருத்தப்பட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

‘துப்பாக்கி’ படத்தைப் பார்த்த இஸ்லாமிய நண்பர் ஏ.ஆர். முருகதாஸிடம் கேட்ட கேள்வியால் அவர் மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

TNN 29 Jul 2017, 3:59 pm
‘துப்பாக்கி’ படத்தைப் பார்த்த இஸ்லாமிய நண்பர் ஏ.ஆர். முருகதாஸிடம் கேட்ட கேள்வியால் அவர் மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.
Samayam Tamil while thuppakki shooting vijay ask a question to ar murugadoss
‘துப்பாக்கி’ படத்தைப் பார்த்து நண்பன் கேட்ட கேள்வியால் வருத்தப்பட்ட ஏ.ஆர். முருகதாஸ்!


விஜய் முதன் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த படம் ‘துப்பாக்கி’. இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் ராணுவ வீரர்களின் பணியையும் அவர்களது குடும்பங்களின் நிலைமையையும் எடுத்துக் கூறியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம் ரஜினியின் ‘எந்திரன்’ படத்திற்கு பிறகு அதிக வசூலை ‘துப்பாக்கி’ படம் தந்தது. இந்த படத்திற்காக பல விருதுகள் கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியால் மீண்டும் கூட்டணி அமைத்து ‘கத்தி’ படம் உருவானது.

தற்போது விஜய், அட்லி இயக்கத்தில் ‘மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஏ.ஆர். முருகதாஸ் ‘துப்பாக்கி’ படத்தை எடுத்ததற்காக மிகவும் வருத்தப்படுகிறேன் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதற்கு ஒரு காரணம் உள்ளது.

அது என்னவெனில், அவருடைய இஸ்லாமிய நண்பர் ஒருவர் ‘துப்பாக்கி’ படத்தைப் பார்த்து விட்டு, ஏ.ஆர். முருகதாஸிடம், ஏற்கனவே தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்களை தான் காட்டுகிறார்கள். நீங்களுமா இப்படி? என்று கேட்டுவிட்டாராம். அவர் சொன்ன வார்த்தை எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது என்றார் ஏ.ஆர். முருகதாஸ். இப்படி ஒன்று இருப்பதை யோசிக்காமல் படத்தை எடுத்துவிட்டோமே என இப்போது வருந்துகிறேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்