ஆப்நகரம்

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இமாலய வெற்றிக்கு பின்னால் இருந்தது யார்?

தமிழகத்தின் மிகப்பெரும் பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நல குறைவால் இன்று காலமானார். எஸ்.பி.பி குறித்து பத்திரிக்கையாளரும் இயக்குனருமான இமாண்டி ராம்தேவ் பல விளக்கங்களை அளிக்கிறார்.

Samayam Tamil 25 Sep 2020, 9:42 pm
எஸ்.பி.பி சுமார் 50 நாட்கள் மரணத்துடன் போராடி தனது இறுதி மூச்சை விட்டார். இந்த புகழ்ப் பெற்ற பாடகரின் இறப்பால் உலகம் முழுவதும் உள்ள எஸ்.பி.பி ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மொத்த சினிமா துறையிலும் சோகம் படிந்துள்ளது. பல திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil who helped singer sp balasubrahmanyam in early stages
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இமாலய வெற்றிக்கு பின்னால் இருந்தது யார்?


எஸ்.பி.பி சிறுவயதாக இருக்கும் போது அவரது குரல் தேனை போல இருந்ததாக இமாண்டி கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது எஸ்.பி.பி ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா திரைப்படத்தில் “அஹோ அமி விந்தா மஹோ” என்ற தலைப்பில் ஷோபன் பாபுவுடன் தனது முதல் திரைப்பாடலை பாடினார்.

​வாழ்க்கை

எஸ்.பி.பி நல்ல மனிதராக இருந்தார். அவர் தனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளையே பார்த்ததில்லை. அவருடன் வேலை செய்யும் அனைவரிடமும் உறவினரை போல பழகினார். அவருக்கு திருமண வாழ்வில் சில சிக்கல்கள் இருந்தாலும் சினிமா துறையில் சிக்கல்களே இருந்தது கிடையாது. ஒரு நாளைக்கு குறைந்தது 10 பாடல்கள் பாடுவார். அப்படி ஒரு திறனை தமிழ் சினிமாவில் அவர் மட்டுமே பெற்றிருந்தார்.

​டப்பிங்

எஸ்.பி.பியின் பக்தி பாடல்கள் பிரபலமானவை. அவை ஒவ்வொரு கோவிலிலும் கேட்கப்பட்டன. இப்போது வரை அவரது சிவன் பாடல்களே பல கோவில்களில் ஒலித்து வருகின்றன. அவர் பல திரைப்படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார். எஸ்.பி.பி கெவின் மற்றும் விஸ்வநாத் ராவ் போன்றவர்களுடன் நல் உறவில் இருந்தார்.

​சீடர்கள்

எஸ்.பி.பி வெளிநாடுகளில் பல பாடல்களை பாடியுள்ளார். இதனால் அவர் பல ஆயிரம் சீடர்களை உருவாக்கினார். அவருக்கு வெளிநாட்டில் கூட மாணவர்கள் உள்ளனர். எஸ்.பி.பி என்னும் பெயர் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலும் மக்களிடையே இருக்கும்.

இப்படியாக உலகம் முழுக்க சீடர்களை உருவாக்குவது வேறு யாருக்கும் சாத்தியமில்லாத விஷயமாகும். தங்களை பாலசுப்பிரமணியனின் சீடர்கள் என சொல்லிக்கொள்வதில் அவர்கள் பெருமைப்படுகின்றனர்.

அதே போல தெலுங்கு இசையை வெளிநாடுகளுக்கு பரப்பிய பெருமையும் பாலுவையே சேரும். சரஸ்வதி தனது சங்கீத தாகத்தை தீர்க்க பாலு என்னும் கலைஞனை தேர்ந்தெடுத்துள்ளார். இசை உலகம் முழுவதும் உள்ளது. உலகில் ஏழை பணக்காரர்கள் அனைவரும் ஒரே மாதிரியே இசையை கற்றுக்கொள்ள நினைக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்