ஆப்நகரம்

நடிகை கஸ்தூரியை சீண்டிய அந்த ஹீரோ யார்?

ஹீரோவாக இருந்த ஒருவர் நான் ஹீரோயினாக இருந்த போது என்னை படாதபாடு படுத்திவிட்டார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

TNN 14 Mar 2017, 2:15 pm
1990களில் பிரபலமான ஹீரோயினாக இருந்தவர் கஸ்தூரி, பிரபு, கமலஹாசன் உள்பட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பிறகு அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார். அவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ள நிலையில், அவருடைய மகளுக்கு நடனம் கற்றுக்கொள்வதற்காக சென்னை வந்துள்ளார்.
Samayam Tamil who is the hero who harassed actress kasturi
நடிகை கஸ்தூரியை சீண்டிய அந்த ஹீரோ யார்?


இந்நிலையில், ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிக்கும் போது சில படங்களில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். அவர்கள் சொன்னபடியெல்லாம் நான் அட்ஜெஸ்ட் செய்யாதது தான். இதற்கு காரணம் ஒரு ஹீரோ தான்.

அந்த ஹீரோ தற்போது அரசியல்வாதியாக இருக்கிறார். அவரை நான் மதிக்கிறேன். ஆனால், அவரால் இல்லை என்ற பதிலை மட்டும் தாங்கவே முடியாது. யாரும் அவர் கேட்கும் போது இல்லை என்று சொல்லக்கூடாது. அவருடன், நான் நடிக்கும் போது படம் முடியும் வரை என்னை கொடுமைப்படுத்தினார். அதோடு இல்லாமல், என்னை இரண்டு படங்களில் இருந்தும் வெளியேற்றினார்.

மேலும், என் அம்மாவிடம் உங்களது மகள், என்னிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றார். அதனை என் அம்மா காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை என்று கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

Who is the hero who harassed actress kasturi.

அடுத்த செய்தி

டிரெண்டிங்