ஆப்நகரம்

என்னை வசைபாடியவர்கள் தற்போது உதவி செய்கிறார்கள்: நடிகை நிலானி!

என்னை வசைபாடியவர்கள் தற்போது எனக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள் என சாவில் இருந்து மீண்ட நடிகை நிலானி கூறியுள்ளார்.

Samayam Tamil 6 Oct 2018, 4:29 pm
சின்னத்திரை நடிகையாக இருந்து வந்தவர் நடிகை நிலானி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரைப் பற்றி ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. அதாவது நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் நான் தற்கொலை செய்து கொண்டேன் என்று உதவி இயக்குனர் காந்தி என்கிற லலித்குமார் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
Samayam Tamil nilani.actress


இந்த செய்தியைக் கேட்ட பலரும் நிலானியை திட்டி தீர்த்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த நடிகை நிலானி கொசுவுக்காக வைத்திருந்த பூச்சு மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாறறினர். இவர் மீது போலீசார் வழக்கு தொடுத்திருந்தனர். ஜமீலா என்பவர் நிலானிக்கு கவுன்சிலிங் கொடுத்தார்.

தற்போது நடிகை நிலானி கூறுகையில், ‘‘மரணம் ஒன்றே வழி என்ற மனநிலையில் இருந்த நான் இப்போது 100% மாறிவிட்டேன். என்னை வசைபாடியவர்கள் எல்லோரும் தற்போது எனக்கு உதவி செய்து வருகிறார்கள். இனிமேல் நல்லா வாழ விரும்புகிறேன்’’ என்று பேசியுள்ளார் நிலானி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்