ஆப்நகரம்

பிக்பாஸ் 100வது நாள்: யார் அந்த வெற்றியாளர்?

அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாளே தற்போது நடந்து வருகிறது.

TNN 30 Sep 2017, 9:52 pm
அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாளே தற்போது நடந்து வருகிறது.
Samayam Tamil who will win the biggboss tamil season1 title
பிக்பாஸ் 100வது நாள்: யார் அந்த வெற்றியாளர்?


அனைத்து வசதிகளுடன் கூடிய குட்டி சிறை போன்ற வீட்டில் பிக்பாஸ் போட்டியாளர்கள் 100 நாட்கள் அடைக்கப்பட்டு, உலகத்தில் இருந்து அப்பார்பட்டு, அதில் கலந்து கொண்டுள்ள மற்ற போட்டியாளர்களுடன் மட்டும் பேசி, பழகி, சண்டையிட்டுக் கொண்டு சென்ற நிலையில், தற்போது கிராண்ட் பினாலே அளவில் வந்து நிற்கிறது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 15 போட்டியாளர்களில் தொடங்கி ஒவ்வொருவராக வெளியேறி பிறகு புதிதாக 4 போட்டியாளர்கள் அறிமுகமாகி இறுதியில் ஆரவ், கணேஷ், சினேகன், ஹரீஷ் என்ற 4 போட்டியாளர்களில் வந்து நிற்கிறது. இதில், யார் அந்த வெற்றியாளர் என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். கிராண்ட் பினாலேயில் வெளியேறிய ஒவ்வொரு போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் விதவிதமான ஆடை அலங்காரத்துடன் பார்க்கும் ரசிகர்களை கவரும் வகையில் வருகை தந்து பரவசப்படுத்தியுள்ளனர். இதில், நமீதா மட்டும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்