ஆப்நகரம்

ரைசா ? வையாபுரி ? யார் முதலில் வெளியேறுவார்.

பிக்பாஸ் வீட்டில் அடுத்து யார் வெளியேறு வார் என்ற விவாதம் சமூக வளைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தானாகவே வையாபுரி ரைசா வெளியேற வாய்ப்புள்ளது என்று அவர்களின் நடவடிக்கையால் உணர்த்தப்படுகிறது.

TNN 28 Jul 2017, 6:26 pm
பிக்பாஸ் வீட்டில் அடுத்து யார் வெளியேறு வார் என்ற விவாதம் சமூக வளைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தானாகவே வையாபுரி ரைசா வெளியேற வாய்ப்புள்ளது என்று அவர்களின் நடவடிக்கையால் உணர்த்தப்படுகிறது.
Samayam Tamil whos gone to evicted first
ரைசா ? வையாபுரி ? யார் முதலில் வெளியேறுவார்.


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் தமிழ் மக்கள் அனைவரின் வரவேற்பையும் , அதிக விமர்சனங்களையும் சம்பாதித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை சீர்குலைக்கிறது என்று இந்த நிகழ்ச்சிக்கு பல விமர்சனங்கள் வந்தபோதிலும் இது மக்களின் ஆர்வத்தை அதிகமாக ஈர்த்தது.


இந்த நிகழ்ச்சியை திட்டுவதற்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த வாரம் நமீதா வெளியான பிறகு சில நாட்கள் பல சர்ச்சைகள் நிகழ்ச்சியில் ஏற்பட்டது. அனைவரும் ஓவியா வை ஓரம் கட்ட நினைத்து அவரகளால் முடியவில்லை .
அதேபோல் ஓவியா பற்றி காயத்ரி ரகுராமின் தவறான புரிதலை மாற்றுவதற்கு பிக்பாஸே சில நுட்பங்களை செய்தது. இதனால் அதிக சர்ச்சைகள் ஏற்படவில்லை . ஆனால் அந்த வீட்டில் எப்போதும் தனிமையாகவே இருவர் இருக்கின்றனர் . அது வையபுரி மற்றும் ரைசா. வையாபுரி எப்போதும் தனது குடும்பத்தை பிரிந்த சோகத்தில் இருக்கிறார். அதேபோல் ரைசாவும் ”அவர் உண்டு , அவர் மேகப் உண்டு ” என்று தனியாகவே இருக்கிறார். எப்போதும் அவர் தனது மேகப்பை பற்றி மட்டும் கவலைப்படுகிறார். எஸ் , ரைட், ஓகே என்ற வார்த்தைகளை மட்டும்தான் அதிகமாக பேசுகிறார். இதில் யார் வெளியேருவார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க முடியும் .

அடுத்த செய்தி

டிரெண்டிங்