ஆப்நகரம்

யாராக இருந்தாலும் சுயக்கட்டுப்பாடு வேண்டும் என்கிறார் தன்ஷிகா!

டுவிட்டரை பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும் சுயக்கட்டுப்பாடு வேண்டும் என்று நடிகை தன்ஷிகா கூறியுள்ளார்.

TNN 8 Mar 2017, 3:45 pm
டுவிட்டரை பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும் சுயக்கட்டுப்பாடு வேண்டும் என்று நடிகை தன்ஷிகா கூறியுள்ளார்.
Samayam Tamil whosever to have the self control dhansika
யாராக இருந்தாலும் சுயக்கட்டுப்பாடு வேண்டும் என்கிறார் தன்ஷிகா!


கடந்த சில நாட்களாக ட்விட்டரில் ஆபாச படங்கள் உலா வருவதை பார்க்க அருவருப்பாக இருப்பதாக நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார். பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, அனிருத், ஹன்சிகா உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அதன் பிறகு ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இந்த காரணத்தால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட சில நடிகைகளின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் ட்விட்டருக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ட்விட்டரில் கடந்த சில நாட்களாக ஆபாச படங்களாக வருகின்றன. இதனால் ட்விட்டர் பக்கம் போகவே அருவருப்பாக உள்ளது என நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பொது மக்கள் உள்ளனர், திரையுலக பிரபலங்களும் உள்ளனர். யாராக இருந்தாலும் சரி சுயக்கட்டுபாடு வேண்டும். சர்ச்சை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் தன்ஷிகா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்