குறும்படங்களில் நடித்து புகழ் பெற்ற தீரஜ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ஒரு புகழ் பெற்ற டாக்டர் ஆவார். புகழ் பெற்ற மாடல் பிரதாயினி இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். சாபு ஜோசப் இப்படத்தை எடிட் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஒரு தமிழ் சினிமாவிற்கு ஒரு புது வகை திரில்லர் அனுபவம் தரும் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஒளிப்பாதிவாளர் பாலசுப்பிரமணியம் எதிர்பாராவிதமாக கதறி அழுதார்.
தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். பிதாமகன் முதல் சீமராஜா வரை தமிழின் பல பிரபல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு , மலையாளப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் மேடையில் பேசியபோது தன் மனைவி உடல்நிலை சரியாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் தீரஜ் உதவினாரகள் என்று பேசினார்.
அவர் பேசுகையில், ''உதயநிதி ஸ்டாலினின் அனைத்து படங்களுக்கும் நான் தான் ஒளிப்பதிவு செய்துள்ளேன். அவர் மூலம் தான் இப்படத்தின் நாயகன் தீரஜ்ஜை தெரியும். சில மாதங்களுக்கு முன் என் மனைவிக்கு உடல்நிலை மோசமானது. உதயநிதியும் தீரஜ்ஜும் இல்லையென்றால் என் மனைவி இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார். இரவு முழுதும் கண்விழித்து என் கூடவே இருந்தார்கள். எல்லாவற்றையும் அவர்கள் தான் பார்த்தார்கள்'' என்றார். இவ்வாறு அவர் பேசும்போது, உணர்ச்சி வசப்பட்டு மனம் உடைந்து அழ ஆரம்பித்தார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. கதாநாயகன் தீரஜ் பாலசுப்பிரமணியத்தை சமாதானம் செய்தார்.
இப்படம் பற்றி மேலும் பேசிய பாலசுப்பிரமணியம் நன்றிக்கடனாகத் தான் இப்படத்தை செய்தேன். படக்குழு மிகத் திறமை வாய்ந்தவர்களை கொண்டுள்ளது. படம் முழுவதும் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஒளிப்பாதிவாளர் பாலசுப்பிரமணியம் எதிர்பாராவிதமாக கதறி அழுதார்.
தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். பிதாமகன் முதல் சீமராஜா வரை தமிழின் பல பிரபல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு , மலையாளப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் மேடையில் பேசியபோது தன் மனைவி உடல்நிலை சரியாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் தீரஜ் உதவினாரகள் என்று பேசினார்.
அவர் பேசுகையில், ''உதயநிதி ஸ்டாலினின் அனைத்து படங்களுக்கும் நான் தான் ஒளிப்பதிவு செய்துள்ளேன். அவர் மூலம் தான் இப்படத்தின் நாயகன் தீரஜ்ஜை தெரியும். சில மாதங்களுக்கு முன் என் மனைவிக்கு உடல்நிலை மோசமானது. உதயநிதியும் தீரஜ்ஜும் இல்லையென்றால் என் மனைவி இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார். இரவு முழுதும் கண்விழித்து என் கூடவே இருந்தார்கள். எல்லாவற்றையும் அவர்கள் தான் பார்த்தார்கள்'' என்றார். இவ்வாறு அவர் பேசும்போது, உணர்ச்சி வசப்பட்டு மனம் உடைந்து அழ ஆரம்பித்தார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. கதாநாயகன் தீரஜ் பாலசுப்பிரமணியத்தை சமாதானம் செய்தார்.
இப்படம் பற்றி மேலும் பேசிய பாலசுப்பிரமணியம் நன்றிக்கடனாகத் தான் இப்படத்தை செய்தேன். படக்குழு மிகத் திறமை வாய்ந்தவர்களை கொண்டுள்ளது. படம் முழுவதும் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.