ஆப்நகரம்

தனுஷ் போட்டுக் கொடுத்ததால் ‘கெட்டவன்’ படம் டிராப்பானது!

நடிகர் தனுஷ், ‘கெட்டவன்’ பட இயக்குனரை, நடிகர் சிம்புவிடம் போட்டுக் கொடுத்ததால் ‘கெட்டவன்’ படம் பாதியிலேயே நின்று போனது.

Samayam Tamil 12 Oct 2018, 5:28 pm
நடிகர் சிம்பு ‘கெட்டவன்’ படத்தில் நடிக்க ஆரம்பித்து பின் அது பாதியில் நின்றுவிட்டது. அந்த படத்தை மீண்டும் எடுப்பீர்களா என்று கூட ரசிகர்கள் அடிக்கடி கேட்பதுண்டு. இந்தப் படத்தை ஜி.டி. நந்து இயக்கி வந்தார்.
Samayam Tamil kettavan


இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜி.டி. நந்து தற்போது ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் “கெட்டவன் படம் பாதியில் நின்றதற்கு தனுஷ் தான் காரணம்“ என கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் கதையை முதலில் சிம்புவிடம்தான் சொன்னாராம் இயக்குனர். சிம்பு நடிக்க மறுத்ததால், பின்னர் ஜீவா, பரத்திடம் சொன்னாராம். அதையடுத்து தனுஷை சந்தித்து கதை சொல்ல சென்றுள்ளார், ஆனால் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லையாம். பின்னர் சிம்புவே ‘கெட்டவன்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தொடங்கி பணிகள் நடந்து வந்தது.

அப்போது சிம்புவுக்கு போன் செய்த நடிகர் தனுஷ் “உனக்கு இந்தப் படத்தின் கதை பிடிக்கவில்லை என்று சொன்னதும் அவர் என்னிடம் கதை சொல்ல வந்தார். இப்படி நன்றி கெட்டு இருப்பவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கிறாய்?” என்று கேட்டாராம் தனுஷ். அதனால் சிம்பு-, இயக்குனர் ஜி.டி. நந்து இடையே மனக்கசப்பு ஆரம்பித்துள்ளது. ஒரு சமயத்தில் படத்தையே நிறுத்த அதுவே காரணம் ஆகிவிட்டது என இயக்குனர் நந்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்