ஆப்நகரம்

மம்முட்டி கையை பிடித்து இழுத்த நயன்தாரா..!!

63-வது ஃபிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கும் மம்முட்டிக்கும் இடையில் நடந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

TNN 21 Jun 2016, 2:58 pm
63-வது ஃபிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கும் மம்முட்டிக்கும் இடையில் நடந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Samayam Tamil why mammotty avoid nayanthara in filmfare awards function
மம்முட்டி கையை பிடித்து இழுத்த நயன்தாரா..!!


63-வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் தென்னிந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.மலையாள மொழியில் சிறந்த நடிகருக்கான விருதை ’பதேமாரி’ படத்திற்காக மம்முட்டி பெற்றார்.தமிழ் மொழியில் சிறந்த நடிகைக்கான விருதை ’நானும் ரவுடிதான்’ படத்திற்காக நயன் தாரா பெற்றார்.கடந்த வருடம் ’பாஸ்கர் தி ராஸ்கல்’, இந்த வருடம் ’புதிய நியமம்’ ஆகிய மலையாள படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.


ஆனால் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என தெரியவில்லை,ஃபிலிம்பேர் விருது நிகழ்ச்சியின் போது நயன் தாராவை கண்டதும் முகத்தை திருப்பிக்கொண்டுள்ளார் மம்முட்டி.விழா அரங்கின் முதல் வரிசையில் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி மற்றும் நிவின் பாலி ஆகியோருடன் மம்முட்டி அமர்ந்திருந்தார்.


அப்போது அந்த வழியே வந்த நயன்தாரா மம்முட்டிக்கு கைகொடுத்தார்.ஆனால் நயன் தாராவை கண்டுகொள்ளாத மம்முட்டி நிகழ்ச்சியை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தார்.பின்னர் சுதாரித்துக் கொண்ட மம்முட்டி,நயன் தாராவுக்கு பதிலுக்கு கைகொடுக்காமல்,கை கூப்பி வணக்கம் மட்டும் தெரிவித்தார்.






ஆனால் நயன் தாரா பிடிவாதமாக மம்முட்டியின் கைகளை வலுக்கட்டாயமாக இழுத்து கைகுலுக்கிச் சென்றார்.





மம்முட்டி வேடிக்கைக்காக இப்படி செய்தாரா?அல்லது நயன் தாராவை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி நடந்து கொண்டாரா?அப்படி என்றால் அவர்களுக்கிடையே என்ன பிரச்சனை? என மலையாள திரையுலகம் முழுவதும் ஒரே பேச்சாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்