ஆப்நகரம்

ஆண்களின் பலம் எதற்கு?: சசிகுமார்!

‘’ஆண்டவன் ஆண்களை பலமாகப் படைத்திருப்பதற்குக் காரணம் பெண்களை அவன் பாதுகாப்பான் என்பதற்காகத்தான்’’ என்கிறார் சசிகுமார்.

TOI Contributor 9 Mar 2016, 3:01 pm
‘’ஆண்டவன் ஆண்களை பலமாகப் படைத்திருப்பதற்குக் காரணம் பெண்களை அவன் பாதுகாப்பான் என்பதற்காகத்தான்’’ என்கிறார் சசிகுமார்.
Samayam Tamil why men are strength sasi kumar
ஆண்களின் பலம் எதற்கு?: சசிகுமார்!

நடிகரும், டைரக்டருமான சசிகுமார், பெண்கள் தின வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெண்களை ஒரே ஒரு நாள் மட்டும் ஒதுக்கி நாம் கொண்டாடிவிட முடியாது. தாயாக, சகோதரியாக, தோழியாக எத்தனையோ பெண்கள் காட்டும் பேரன்பு தான் நம்மை இயக்குகிறது. நாம் சறுக்கும் போதெல்லாம் அவர்களின் அன்புதான் நம்மை தாங்கிப் பிடிக்கிறது. ஆணுக்கு நிகராக மட்டும் அல்ல, பெண்கள் ஆண்களையே மிஞ்சுகிற அளவுக்கு இன்றைக்கு அத்தனைத் துறைகளிலும் சாதிக்கிறார்கள்.
விவசாயம் தொடங்கி விண்வெளி வரை சகல திசைகளிலும் வியக்க வைக்கிறார்கள். ஆனால், இந்த நவீன யுகத்திலும் அடக்குமுறையும், பாலியல் கொடுமையும் தினம் தினம் நடப்பது இந்த சமூகத்தின் சகிக்க முடியாத வேதனை. ஆண்களைப் பலமாகப் படைத்ததற்குக் காரணமே பெண்களைப் பாதுகாக்கத் தான்; பலாத்காரப்படுத்த அல்ல. பெண்களை அடக்கி ஆள நினைக்கும் மனோபாவம் இன்னமும் நம்மிடத்தில் முழுதாகப் போகவில்லை.
பெண்ணாகப் பிறந்திருக்கும் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள்.
கற்பழிப்புகளும், ஆசிட் வீச்சுகளும் இல்லாத உலகம் என்றைக்கு மலர்கிறதோ, அதுவே உண்மையான மகளிர் தினமாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்