ஆப்நகரம்

திரைப்படத்துக்கு முழுக்கு போட மோகன்லால் திட்டமா?

‘புலி முருகன்’ படம் தோல்வியடைந்தால் சினிமாவுக்கு முழுக்குப்போட நடிகர் மோகன்லால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 1 Nov 2016, 12:32 pm
‘புலி முருகன்’ படம் தோல்வியடைந்தால் சினிமாவுக்கு முழுக்குப்போட நடிகர் மோகன்லால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil why mohanlal decided not to act in the film
திரைப்படத்துக்கு முழுக்கு போட மோகன்லால் திட்டமா?


தற்போது மோகன்லால் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘புலி முருகன்’. இதே ஆண்டில் இன்னொரு வெற்றிப்படத்தையும் கொடுத்துள்ளார். அது ‘த்ரிஷ்யம்’. அதற்கு முன் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது. ‘புலி முருகன்’ படம் தோல்வியடைந்தால் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விடலாம் என நினைத்திருந்தாராம் மோகன்லால். இந்த செய்தியை ‘புலி முருகன்’ படத்தின் இயக்குனர் வைசாக் ஒரு பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.

‘புலி முருகன்’ படப்பிடிப்பிற்காக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து, மனம் கோணாமல் பொறுமையாக முழு ஒத்துழைப்பு தந்ததைப் பார்த்து மனம் உருகிப்போனாராம் இயக்குனர் வைசாக்.

அப்போது மோகன்லாலிடம் இந்தப்படம் ஓடாவிட்டால் தனது டைரக்சன் தொழிலை மூட்டைகட்டி வைத்துவிட்டு வேறு வேலைபார்க்க போய்விடுவேன் என்று சொன்னாராம் வைசாக். ஆனால் அதை கேட்ட மோகன்லால், “இந்தப்படம் நிச்சயம் ஓடும்.. அப்படி இது ஓடாவிட்டால், இனி நானும் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிடுவேன்” என வைசாக்கிடம் சொன்னாராம். அந்த அளவுக்கு இந்தப்படத்தின் மீது மோகன்லால் வைத்திருந்த முழு நம்பிக்கையை பார்த்து வைசாக் உட்பட ‘புலி முருகன்’ யூனிட்டே வெற்றிக்காக அதிகமாக உழைத்தார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்