ஆப்நகரம்

எதற்கு தெலுங்கு படங்களை நயன்தாரா தவிர்க்கிறார்?

தொடர்ந்து வரும் தெலுங்கு பட வாய்ப்புககளை நடிகை நயன்தாரா தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

TOI Contributor 12 Nov 2016, 5:16 pm
தொடர்ந்து வரும் தெலுங்கு பட வாய்ப்புககளை நடிகை நயன்தாரா தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
Samayam Tamil why nayanthara is avoiding telugu films
எதற்கு தெலுங்கு படங்களை நயன்தாரா தவிர்க்கிறார்?


தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகை நயன்தாரா நடித்த படங்கள் நன்றாக ஓடி இருப்பதால் அவரைத் தேடி தெலுங்கு தயாரிப்பாளர்கள் வருகின்றனர். ஆனால், நயன்தாரா தெலுங்கு திரையுலகத்தின் மீது கோபத்தில் இருக்கிறார். காரணம், இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘அனாமிகா’ என்ற தெலுங்குப் படத்தின் பிரமோஷனுக்கு வரவில்லை என்ற காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சிலர் குரல் எழுப்பினார்கள். அவரை தெலுங்கு படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று தடை விதித்தார்கள். சுமார் 2 வருடங்களுக்குப் பிறகுதான் ‘பாபு பங்காரம்‘ படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், அந்தப் படத்தின் இறுதிக் கட்டத்திலும் நயன்தாராவிற்கும் படக்குழுவினருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

இதனால்தான் நயன்தாரா தெலுங்குப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறார் என்கிறார்கள். இதற்கு முன் சிரஞ்சீவி நடித்து வரும் ‘கைதி எண் 150’ படத்திற்கும், பாலகிருஷ்ணா நடித்து வரும் ‘கௌதமிபுத்ர சட்டகர்னி’ படத்திற்கும் அவரை நாயகியாக நடிக்கக் கேட்டார்கள். ஆனால், நயன்தாரா அதற்கு சம்மதிக்கவில்லை. 3 கோடி ரூபாய்க்கு மேலும் சம்பளம் தருவதாகக் கூறியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு பக்கம் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க சம்மதிக்க மறுக்கும் நயன்தாரா தமிழில் மட்டும் சிவகார்த்திகேயன், அதர்வாவுடன் என்று எப்படி நடிக்கிறார் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்