ஆப்நகரம்

அன்று அப்படி சொன்னவர்கள் இன்று என் போனைகூட எடுப்பதில்லை: வருத்தப்படும் வையாபுரி!

ஒரே குடும்பமாக எப்போதும் இருப்போம் என்று பிக்பாஸ் வீட்டில் கூறியவர்கள் இப்போது என் போனைக்கூட எடுப்பதில்லை என்று நடிகர் வையாபுரி வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Samayam Tamil 2 Feb 2018, 3:53 pm
ஒரே குடும்பமாக எப்போதும் இருப்போம் என்று பிக்பாஸ் வீட்டில் கூறியவர்கள் இப்போது என் போனைக்கூட எடுப்பதில்லை என்று நடிகர் வையாபுரி வருத்தத்துடன் கூறியுள்ளார்.
Samayam Tamil why they didnt pick my calls biggboss vaiyapuri
அன்று அப்படி சொன்னவர்கள் இன்று என் போனைகூட எடுப்பதில்லை: வருத்தப்படும் வையாபுரி!


பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர் நடிகர் வையாபுரி. இந்த நிகழ்ச்சிக்குப் பின் நடிகர் வையாபுரி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான வையாபுரி நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே பிக்பாஸ் வீட்டை விட்டுப் போகிறேன் என அழுது கொண்டே இருந்தார். அதனால் மக்களிடம் பெரிய அனுதாபத்தை சந்தித்தார். இதனால் 80 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப் படாமல் இருந்தார்.

தற்போது, வையாபுரி சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு-2’ படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி ஒன்றில், ‘‘பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, போட்டி முடிந்து வெளியே வந்தாலும், நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்போம், ஓன்றாக ஊர் சுற்றுவோம் என கூறியவர்கள். இப்போது என் போன் அழைப்பை கூட எடுப்பதில்லை’’ என வருத்தத்துடன் புலம்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்