ஆப்நகரம்

இளையராஜாவுக்கு ராயல்டி கொடுக்க மறுப்பது ஏன்? ஆலோசகர் கேள்வி

இளையராஜாவின் இசை பாடல்களை பயன்படுத்தி கோடிக்கணக்கில் வருமானம் செய்தவர்கள் அவருக்கு ராயல்டி கொடுக்க மறுப்பது ஏன் என்று இளையராஜாவின் காப்பிரைட் ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 20 Mar 2017, 4:26 pm
இளையராஜாவின் இசை பாடல்களை பயன்படுத்தி கோடிக்கணக்கில் வருமானம் செய்தவர்கள் அவருக்கு ராயல்டி கொடுக்க மறுப்பது ஏன் என்று இளையராஜாவின் காப்பிரைட் ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil why they refusal to pay royalty for ilayaraja advisor question
இளையராஜாவுக்கு ராயல்டி கொடுக்க மறுப்பது ஏன்? ஆலோசகர் கேள்வி


பிரபல பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியன் 50 நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களைப் பாட அனுமதி பெற வேண்டும், ராயல்டி தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து இளையராஜாவின் காப்பிரைட் ஆலோசகர் பிரதீப் கூறியிருப்பதாவது: பல நிகழ்ச்சிகளில் பாடகர்கள் பாடி வருவாயைக் குவிக்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளர்களுக்கு ஒரு ரூபாய் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை (இளையராஜா காப்பிரைட்) சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் இளையராஜா செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: இனி மேடைகளில் தனது பாடல்களைப் பாட முறையான அனுமதி பெற வேண்டும், ராயல்டி தரவேண்டும் என்று கூறினார்.
பல ஆயிரம் பாடல்கள், இசையை உருவாக்கிய ஒரு இசை மேதைக்கு உரிய காப்புரிமைத் தொகையை இன்று வரை யாரும் தரவில்லை. கச்சேரிகள் மூலம் பல ரூபாயை பாடகர்கள் சம்பாதிக்கிறார்கள். ஆனால், பாடல்களை உருவாக்கிய இசையமைப்பாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தருவதில்லை.

எஸ்பிபி 50 உலக சுற்றுப் பயணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்குவதற்கு முன்பு இளையராஜாவிடம் அனுமதி பெற்றிருக்கலாம். அதன் பின் கச்சேரி நடத்தி வசூலாகும் பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை மட்டும் பங்காக கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பாடப்படும் பாடல்களுக்கு முறையான அனுமதி பெற்று, அதற்கு உரித்தான ராயல்டியை மட்டும் தான் தரச் சொல்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்