சென்னை: சின்னத்திரை நடிகை வாணி போஜன் தற்போது சினிமாவில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இனி சீரியல்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தவர், நடிகை வாணி போஜன். இவர் தற்போது வேறு சீரியல்களில் நடிக்காமல் உள்ளார்.
இந்நிலையில் அவர் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளதாக முன்பே செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவரே தற்போது அளித்த பேட்டியில், இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார். அதேநேரம் கொஞ்ச நாள் சின்னதிரைக்கு ஓய்வு கொடுப்போம் என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாணிபோஜன் கூறுகையில், ‘ ஆரம்பத்தில் நான் தேர்ந்தெடுத்தத் துறை மாடலிங். பிறகுதான் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதே சினிமா வாய்ப்புகள் வந்தது. சினிமா மீதான ஒரு இருந்தது. அதனால் கொஞ்ச காலம் தள்ளிப்போட்டேன். தெய்வமகள் சீரியலுக்குப் பின் ஒவ்வொரு வீட்டிலும் என்னை அவங்க பெண்ணா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. சினிமா பற்றியத் தெளிவு தற்போது கிடைத்துள்ளது. அதனால் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்’ என்றார்.
இந்நிலையில் அவர் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளதாக முன்பே செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவரே தற்போது அளித்த பேட்டியில், இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார். அதேநேரம் கொஞ்ச நாள் சின்னதிரைக்கு ஓய்வு கொடுப்போம் என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.