ஆப்நகரம்

நயன்தாராவுடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொள்ள ஆரா நிறுவனம் ஏற்பாடு!

‘டோரா’ படத்திற்கு வரும் ரசிகர்கள் நடிகை நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆரா பட தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

TNN 27 Mar 2017, 2:52 pm
‘டோரா’ படத்திற்கு வரும் ரசிகர்கள் நடிகை நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆரா பட தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil will take selfie with nayanthara
நயன்தாராவுடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொள்ள ஆரா நிறுவனம் ஏற்பாடு!


இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்த படம் ‘டோரா’. இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் படம் வெளியாகும் தேதி நெருங்கியதால் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டனர்.

மேலும், இந்த படத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக, படம் வெளியாகும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் டோரா கார் போன்று பல வடிவங்களில் கார்கள் வைக்கப்படுகிறதாம். அந்தந்த தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்லும் ரசிகர்கள், அந்த காருக்கு அருகே நின்றபடி செல்பி எடுத்து படத்தை தயாரித்துள்ள ஆரா நிறுவனத்துக்கு அனுப்பினால், அவர்கள் நயன்தாரா சந்தித்து டோரா காருக்குள் அமர்ந்தபடி போட்டோ எடுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறதாம்.

ஆனால் காருடன் நின்று செல்பி எடுத்து அனுப்பும் அத்தனை பேருக்குமே அந்த வாய்ப்பு கிடைக்காதாம். குலுக்கல் முறையில்தான் அதிர்ஷ்டசாலி நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களாம். ஆக, நீண்டகாலமாக தான் நடிக்கும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வரும் நயன்தாரா, இந்த படத்திற்காக முதன்முதலாக இறங்கி வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்