ஆப்நகரம்

பீமா இரண்டாம் பாகத்திற்கு இணையும் லிங்குசாமி – விக்ரம்?

பீமா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இயக்குனர் லிங்குசாமி மற்றும் விக்ரம் இணையவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

Samayam Tamil 26 Sep 2016, 6:40 am
இருமுகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சியான் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் நடிக்கயிருக்கிறார். கருடா படம் நிதி பிரச்னை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாக்ரடீஸ் மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர்களிடன் கதை கேட்டு வருகிறாராம். மேலும், விஜய் சேதுபதியின் சேதுபதியைக் கொடுத்த அருண் இயக்கத்திலும் நடிக்கயிருப்பதாக தகவல் பேசப்படுகிறது.
Samayam Tamil will the bheema duo team up again
பீமா இரண்டாம் பாகத்திற்கு இணையும் லிங்குசாமி – விக்ரம்?


இந்நிலையில் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கயிருப்பதாக இயக்குனர் ஹரி அறிவித்திருந்தார். தற்போது சூர்யாவின் எஸ்-3ல் பிஸியாக இருப்பதால் இப்படம் முடிந்த பிறகு விக்ரமின் சாமி-2 தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 8ம் தேதி வெளிவந்த இருமுகன் படத்தை பார்த்த இயக்குனர் லிங்குசாமி இரண்டாவது முறையாக விக்ரமுடன் இணைவது பற்றி யோசித்து வருகிறாராம். இதற்கு முன்னதாக சில வருங்களுக்கு முன்பாக பீமா படத்தில் இருவரும் இணந்திருந்தனர். தற்போது லிங்குசாமி சண்டைகோழி – 2 மற்றும் அல்லு அர்ஜூனின் இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தையும் எடுக்கயிருக்கிறார். இப்படங்கள் முடிந்த பிறகு விக்ரமுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்