ஆப்நகரம்

மிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும்? பிரசன்னா அளித்த பதில்

இயக்குனர் மிஸ்கின் பாதியில் வெளியேறிய நிலையில் துப்பறிவாளன் 2 படம் சிறப்பாக இருக்குமா என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் பிரசன்னா. என்ன கூறியுள்ளார் பாருங்க..

Samayam Tamil 2 Apr 2020, 10:15 am
விஷால், பிரசன்னா நடித்திருந்த துப்பறிவாளன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் சில மாதங்கள் முன்பு துவங்கியது.
Samayam Tamil Thupparivaalan 2


மிஸ்கின் இயக்கத்தில் துவங்கிய ஷூட்டிங் லண்டனில் நீண்ட நாட்கள் நடந்து வந்தது. விஷால் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலமாக இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் ஷூட்டிங்கில் வீண் செலவு செய்ததாக கூறி விஷால் மற்றும் மிஸ்கின் இடையே வெடித்த பிரச்சனை பெரிதாகி மிஸ்கின் படத்தில் இருந்து விலகினார். அதிக சம்பளம் கேட்டு மிஸ்கின் அனுப்பிய கடிதம் வெளியானது. அதன் பிறகு விஷால் என் அம்மாவை கெட்ட வார்த்தையில் திட்டினார் என மிஸ்கின் ஒரு விழா மேடையில் பேசியதும் சர்ச்சையானது.

மிஸ்கின் NOC கொடுத்துவிட்டதால், மீதி இருக்கும் படத்தினை விஷாலே இயக்கவுள்ளார். அதனால் மிஸ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இது பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் பிரசன்னா ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். "துரதிர்ஷ்டவசமாக மிஸ்கின் படத்தில் இல்லை. அது எனக்கு வருத்தம் தான். விஷால் சிறப்பாக இயக்க வாழ்துகிறேன். அவர் நிரூபிக்க வேண்டியது நிறைய இருக்கிறது" என கூறியுள்ளார்.


மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் விஷாலை பல வருடங்களாக நண்பராக பார்த்து வருகிறேன். ஆனால் அவரை இயக்குனராக தற்போது வரை பார்த்ததில்லை. அவர் சிறப்பாக செய்வார் என நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்