ஆப்நகரம்

விஜய் நடிப்பில் சச்சின் 2 வருமா? இயக்குனர் அளித்த பதில் இது தான்

ரசிகர்களை அதிகம் கவர்ந்த சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் ஜான் மகேந்திரன் பேசி உள்ளார்.

Samayam Tamil 11 Jul 2020, 7:56 pm
தளபதி விஜய்யின் திரைப் பயணத்தில் ரசிகர்களை மிக அதிகளவில் கவர்ந்த படங்களில் சச்சினும் ஒன்று.அந்த படத்தினை ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். தெறி படத்தில் வில்லனாக நடித்து இருந்த மகேந்திரனின் மகன் தான் ஜான் மகேந்திரன். சச்சின் படத்தில் ஜெனிலியா ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகை பிபாஷா பாசு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். வடிவேலு, தாடி பாலாஜி, சந்தானம் உள்ளிட்டவர்கள் காமெடியன்களாக நடித்திருந்தனர்.
Samayam Tamil Vijay in Sachien


விஜய் கல்லூரி மாணவராக மிகவும் அழகாக நடித்து இருப்பார். ஒரு கல்லூரி காதல் கதையை அத்தியாகும் ரசிக்கும் வகையில் கொடுத்திருப்பார் இயக்குனர் ஜான் மகேந்திரன். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா என கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது..

நிச்சயமாக அப்படி ஒரு படம் எடுக்க நான் அதிகம் விரும்புகிறேன். விஜய் தற்போது அதிகம் கமர்சியல் படங்கள் நடிக்கிறார், மேலும் இவருக்கு அதிக அளவில் மாஸான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய் எமோஷனலாக ஒரு நடிகராக நடிக்கும் படத்தை நான் பார்க்க விரும்புகிறேன். நான் இயக்க வேண்டும் என்று இல்லை, அது போல வேறு ஒரு இயக்குனர் இயக்கினாலும் நான் முதலில் சென்று தியேட்டரில் அமர்ந்து பார்ப்பேன்" என ஜான் மகேந்திரன் கூறியுள்ளார்.

சச்சின் போன்ற ஒரு படத்தில் விஜய் மீண்டும் நடித்தால் அந்த படத்தை நிச்சயம் ரசிகர்களுக்கு மிக அதிகளவில் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதையே தான் இயக்குனர் இப்படிக் கூறியுள்ளார்.

விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து விட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக அது ரிலீசாகவில்லை. மேலும் மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படுகிறது என்பதை பொருத்து இந்த படம் இந்த வருடம் தீபாவளி அல்லது அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தளபதி 65 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தினை ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்க உள்ளார் என கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஷுட்டிங் எப்போது துவங்கும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

விஜய்யுடன் கூட்டணி சேர பல முன்னணி இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மோகன் ராஜா, அருண்ராஜா காமராஜ், சுதா கொங்கரா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பல இயக்குனர்கள் விஜய்யுடன் கூட்டணி சேர காத்திருக்கின்றனர். தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக நடித்து வரும் விஜய் சச்சின் போன்ற கதையில் மீண்டும் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்