ஆப்நகரம்

சம்பளத்தை உயர்த்தி கேட்கும் மார்க்கெட் இல்லாத ஹீரோ!

சம்பளத்தை உயர்த்தி கேட்கும் மார்க்கெட் இல்லாத ஹீரோ!

TOI Contributor 6 Dec 2016, 1:41 am
ஒரு படம் கூட சரியாக ஓடவில்லை. இருந்தாலும் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார் நடிகர் கௌதம் கார்த்திக்.
Samayam Tamil without hit films actor goutham karthi increasing salary
சம்பளத்தை உயர்த்தி கேட்கும் மார்க்கெட் இல்லாத ஹீரோ!


முன்னாள் நடிகர் கார்த்திக்கின் வாரிசு கௌதம் கார்த்திக். ‘கடல்’ படம் மூலம் கௌதம் கார்த்திக்கை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மணிரத்னம். இந்தப் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு கௌதம் கார்த்திக் நடித்த ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’ ஆகியவை தொடர்ந்து தோல்வியை தழுவின. தற்போது தனது வெற்றிக்காகப் போராடி நடித்து வரும் படம் ‘முத்துராலிங்கம்’. இந்தப் படத்தை அவர் நம்பிக்கையடன் எதிர்பார்த்து கார்த்திருக்கிறார். இந்த படத்தில் சிலம்பாட்ட வீரனாக வருகிறார் கௌதம் கார்த்திக். அவருக்கு தந்தையாக நெப்போலியன் நடித்துள்ளார்.

படத்தின் எல்லா வேலையும் முடிந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது. இந்த படத்தின் நாயகியாக பிரியாஆனந்த் நடித்துள்ளார். இந்த படத்திற்காக தன்னை கிராமத்து வாலிபனாக மாற்றியுள்ளார் கௌதம் கார்த்திக். கமர்ஷியல் ரீதியாக இந்த படம் தனக்கு பெரிய ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதற்கிடையே ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘இவன் தந்திரன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இதுவரை தனது சம்பளத்தை உயர்த்தாமல் இருந்த கௌதம் கார்த்திக். புதிதாக கதை சொல்லி தன்னிடம் கால்சீட் கேட்க வரும் சில தயாரிப்பாளர்களிடம் தன்னுடைய சம்பளம் உயர்த்திக் கேட்டுள்ளாராம். எல்லா தயாரிப்பாளர்களும் ‘முத்துராலிங்கம்’ படத்தின் வெற்றியைப் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என்று திரும்பிவிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்