ஆப்நகரம்

இவர்களை பாதுகாப்பதே முதல் கடமை - பொறுப்புடன் பேசிய ஜி.வி.பிரகாஷ்!

முதல் கடமையாக நாம் செய்ய வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து, நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 23 Jun 2019, 1:16 pm
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் மற்றும் சிம்சன் அமைப்பினர் இணைந்து ஐந்து கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டி நடத்தினர்.
Samayam Tamil GV Prakash


இந்தப் போட்டியில் காலை 6 மணி முதல் 500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் சேலம் காந்தி ஸ்டேடியத்தில் இருந்து அஸ்தம்பட்டி உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக ஐந்து கிலோமீட்டர் கடந்து மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தை அடைந்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குவதற்காக இளம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தார். அவர் பரிசு பொருட்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜிவி பிரகாஷ், பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தவிர்க்கப்பட வேண்டும் என்பது முதல் கடமையாக ஒவ்வொரு மக்களுக்கும் இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு என நேரங்கள் ஒதுக்கி, அவர்களது எண்ண ஓட்டங்களையும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். தனி மனித ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் இருந்தால், இது மாதிரியான தவறான செயல்கள் எப்போதும் நடக்காது என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்