ஆப்நகரம்

எவனாவது ஒரு பொண்ண சீரழிக்கனும்னு நினைச்சா தூக்கு தான்னு பயப்படனும்: விஷால்!

இனிமேல் யாராவது ஒரு பொண்ண நாசம் பண்ணனும் என்று நினைத்தாலே தூக்கு தண்டனை தான் என்று பயப்படனும் என்று நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 May 2019, 3:22 pm
இனிமேல் யாராவது ஒரு பொண்ண நாசம் பண்ணனும் என்று நினைத்தாலே தூக்கு தண்டனை தான் என்று பயப்படனும் என்று நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vishal


விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயோக்யா.இந்தப் படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இந்தப் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்தது.இந்நிலையில் இந்தப் படம் ஏப்ரல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 10-ம் தேதி என்று மாற்றியமைக்கப்பட்டது.

மே 10-ம் தேதி வெளியீடு என்றால், முன்பே படத்தை தணிக்கை செய்துவிடுவார்கள். ஆனால், அயோக்யா படக்குழுவோ நேற்று தான் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது. எப்போதுமே வரிசைப்படிதான் படங்களைப் பார்த்து தணிக்கை செய்வோம் என்பது தணிக்கை அதிகாரிகளின் விதிமுறையாக இருக்கிறது.

இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சிக்கலின்றி தணிக்கை முடியுமா என்ற ஆவலுடன் படக்குழு இருந்தது. இந்த நிலையில், உடனடியாக இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அயோக்யா’ படத்தில் தனது பணிகளை முடித்துவிட்டு, விஷால் தனது ட்விட்டர் பதிவில் “அயோக்யா படத்தில் எனது வேலைகள் அனைத்தும் முடிந்தன. நமது சமுதாயத்தை உலுக்கிய பல சம்பவங்கள் மீது எனக்கிருக்கும் கோபத்தைக் காட்ட வாய்ப்பளித்த மோகனுக்கு நன்றி.

இனிமே எவனாவது ஒரு பொண்ணை நாசம் பண்ணனும்னு நினைச்சா தூக்கு தண்டனைதான்னு பயப்படணும் என்று தெரிவித்துள்ளார் விஷால்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்