ஆப்நகரம்

என்னுடன் பணியாற்ற விருப்பமா என்று இயக்குனரிடம் கேட்ட அஜீத்!

இயக்குனர் சிவாவுக்கு போன் செய்து என்னுடன் பணியாற்ற உங்களுக்கு விருப்பமா என்று நடிகர் அஜீத் கேட்டுள்ளார்.

TNN 30 Nov 2017, 4:48 pm
இயக்குனர் சிவாவுக்கு போன் செய்து என்னுடன் பணியாற்ற உங்களுக்கு விருப்பமா என்று நடிகர் அஜீத் கேட்டுள்ளார்.
Samayam Tamil would you like to work with me ajith asked to siva
என்னுடன் பணியாற்ற விருப்பமா என்று இயக்குனரிடம் கேட்ட அஜீத்!


பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் அஜீத். இவர் நான்காவது முறையாக சிவாவுடன் இணையவுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் ‘விசுவாசம்’ என்ற படத்தில் இணையவுள்ளார்கள். ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்திற்கு பிறகு இது சிவாவுடன் இணையும் நான்காவது படமாகும்.

‘விவேகம்’ படத்துக்கு வந்த கலவையான விமர்சனத்திற்கு பின்பு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னணி இயக்குனர்கள் பலர் ரெடியாக இருக்கும்போது தொடர்ந்து நான்காவது முறை சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

சிவா சமீபத்திய பேட்டியில் கூறுகையில், ‘வீரம்’ படத்துக்காக தயாரிப்பு தரப்பில் என்னை பரிந்துரைத்தபோது, அஜீத் எனக்கு போன்செய்து என்னுடன் பணியாற்ற விருப்பமா என்று கேட்டாராம். உடனே இயக்குனர் சிவா ஒரு மணி நேரம் அஜீத்தை சந்தித்து பேசியுள்ளார். பேசியபின் நாம் சேர்ந்து படம் பண்றோம். உங்க வீட்டில் சொல்லிடுங்கனு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம் அஜீத். இத்தனைக்கும் சிவா கதையை பற்றி பேசவே இல்லையாம். அதற்கு பிறகு தான் ‘வீரம்’ கதையே முடிவு செய்தாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்