ஆப்நகரம்

டிவி-க்குள் பேயை வைத்து பயமுறுத்திய படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்..!

இந்திய சினிமாவில் பேய் படத்திற்கு புதிய இலக்கணத்தை வகுத்த ‘யாவரும் நலம்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Samayam Tamil 9 Mar 2019, 12:52 pm
இந்திய சினிமாவில் பேய் படத்திற்கு புதிய இலக்கணத்தை வகுத்த ‘யாவரும் நலம்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Samayam Tamil பேய் படங்களுக்கு புதிய இலக்கணம் வகுத்த படத்தின் 2ம் பாகம்- விரைவில்


யாவரும் நலம், வேட்டை ஆகிய படங்களில் நடித்த மாதவன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு வந்தார். அதன்மூலம் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.


இதற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த “விக்ரம் வேதா” படம் மாதவனுக்கு மேலும் பெரிய வெற்றியை பெற்று தந்தது. தற்போது மாதவன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதையில் இயக்கி, நடித்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு வெளியான “யாவரும் நலம்” படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த தகவலை மாதவன் உறுதிப்படுத்தியுள்ளார். விக்ரம் குமார் இயக்கிய இந்த படம் வித்தியாசமான பேய் படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பேய் பட ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தது இந்த படம் தான் என்று கூட சொல்லலாம்.

முதல்பாகம் கொடுத்த பயத்தை, த்ரிலிங்கை இரண்டாம் பாகம் கொடுக்குமா என்று படம் வெளியான பிறகு தெரியும். வெயிட்டிங் “யாவரும் நலம் 2”..!

அடுத்த செய்தி

டிரெண்டிங்