ஆப்நகரம்

இந்தி சீரியல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழில் ‘யாரடி நீ மோகினி’!

தமிழகத்தில் தற்போது இந்தி சீரியல்களின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது

TNN 20 Apr 2017, 3:16 pm
தமிழகத்தில் தற்போது இந்தி சீரியல்களின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கு போட்டியாக தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பிரமாண்ட சீரியல் தயாராகி வருகிறது.
Samayam Tamil yaradi ne mohini tamil serial wil hit hindi serial
இந்தி சீரியல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழில் ‘யாரடி நீ மோகினி’!


தமிழ்நாட்டுக்குள் இந்தி டப்பிங் சீரியல்களில் ஆதிக்கம் அதிகரித்து விட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிராக சின்னத்திரை கலைஞர்கள் போராட்டங்கள் நடத்தினர். ஆனபோதும் தமிழ் சேனல்களில் இந்தி டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பப்படுவது நிற்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. அதன்காரணமாக, இந்தி சீரியல்கள் பக்கம் திரும்பியுள்ள தமிழ் சீரியல் நேயர்களை இழுக்கும் முயற்சியாக தற்போது சில சீரியல்கள் பிரமாண்டமாக தயாராகத் தொடங்கியிருக்கிறது.

அதன்முதல்கட்டமாக, நான்கு மொழிகளில் குஷ்பு தயாரித்து வரும் நந்தினி சீரியலைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் சேனலில் ‘யாரடி நீ மோகினி’ என்றொரு நெடுந்தொடர் தயாராகி வருகிறது. கிராமத்து கதையில் உருவாகும் இந்த தொடருக்காக சென்னையில் பிரமாண்டமாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

மேலும், இந்தி சீரியலுக்கு இணையாக இந்த தொடரில் காஸ் டியூம்களும் ரிச்சாக பயன்படுத்தப்படுகிறதாம். ஏப்ரல் 24-ந்தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த தொடரில் திருமதி தமிழ் தொடரில் நடித்த சஞ்சய் நாயகனாக நடிக்க, அவருடன் பிரபல நடிகர் -நடிகைகள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்