ஆப்நகரம்

பயத்தில் வீட்டுக்கு போகாமல் ஹோட்டலில் தங்கியிருக்கும் ராக்கி பாய்

நடிகர் யஷ் கே.ஜி.எஃப் 2 ஷூட்டிங் முடிந்தும் வீட்டிற்கு செல்லாமல் ஹோட்டலில் தங்கியிருக்கிறாராம்.

Samayam Tamil 24 Dec 2020, 5:28 pm
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. அந்த படத்திற்கு பிறகு யஷ் வெறும் கன்னட நடிகர் இல்லை. இந்நிலையில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள்.
Samayam Tamil yash


கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது. யஷ், சஞ்சய் தத் தொடர்பான காட்சிகளை படமாக்கியுள்ளார் பிரசாந்த். படப்பிடிப்பு முடிந்து யஷ் பெங்களூருவுக்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லாமல் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார்.

வீட்டில் மனைவி 2 வயது மகள் அய்ரா, ஒரு வயது மகன் யதர்வ் ஆகியோர் இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஹைதராபத்தில் இருந்து நேராக வீட்டிற்கு செல்லாமல் ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் யஷ்.

மனைவி, பிள்ளைகளின் நலன் கருதி தான் யஷ் இப்படி செய்துள்ளார். இரண்டு வாரங்கள் கழித்து அவர் வீட்டிற்கு செல்வாராம்.

சஞ்சய் தத் தான் தொடர்பான காட்சிகளை கடந்த 20ம் தேதியோடு முடித்துவிட்டு படக்குழுவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார். கே.ஜி.எஃப் 2 படத்தில் சஞ்சய் தத் தான் முக்கிய வில்லன். ராக்கி பாயை படாதபாடு படுத்துவாராம்.

ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்துவிட்டது. ஹைதராபாத்தில் கே.ஜி.எஃப். மட்டும் அல்ல ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், அஜித்தின் வலிமை, விஷாலின் எனிமி, சிரஞ்சீவியின் ஆச்சார்யா என்று பல மொழி படங்களின் ஷூட்டிங் நடக்கிறது. அதில் அண்ணாத்த படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று தெரிய வந்தது. இதையடுத்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இது வேணாம், விஷ பரீட்சைனு சொன்னோமே தலைவா: ரஜினி ரசிகாஸ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்