நடிகை யாஷிகா ஆனந்த் தன் தோழி பவானி, நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு காரில் சென்னை திரும்பினார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பவானி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்நிலையில் போலீஸ் விசாரணையில் விபத்து குறித்த தகவல் தெரிய வந்திருக்கிறது.
யாஷிகா காரை மணிக்கு 140 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி வந்திருக்கிறார். அவர் ஓட்டி வந்த ஹாரியர் காரின் மேற்கூரையில் ஒரு டோர் இருக்கிறது. அதை திறந்து தன் இருக்கையில் எழுந்து நின்றிருக்கிறார் பவானி.
காரில் பாட்டு போட்டு கேட்டுக் கொண்டே அனைவரும் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். அப்படி டான்ஸ் ஆடியபோது பவானியின் உடை யாஷிகாவின் கண்களில் பட்டு மறைத்திருக்க வேண்டும். அப்பொழுது கார் யாஷிகாவின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
கார் மேற்கூரையை திறந்து இருக்கையில் நின்று கொண்டிருந்த பவானி தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
காரை ஓட்டிய யாஷிகா சீட் பெல்ட் போடவில்லையாம். செய்யதும், அமீரும் சீட் பெல்ட் போட்டிருந்ததால் பெரிதாக காயம் ஏற்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில் யாஷிகாவிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் அவரின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள். யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோழி பவானி இறந்தது யாஷிகாவுக்கு இதுவரை தெரியாது. அவர் எழுந்து நடக்க 2 மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 3 மாதங்கள் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறியிருக்கிறார்கள்.
யாஷிகாவின் இடுப்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
யாஷிகா காரை மணிக்கு 140 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி வந்திருக்கிறார். அவர் ஓட்டி வந்த ஹாரியர் காரின் மேற்கூரையில் ஒரு டோர் இருக்கிறது. அதை திறந்து தன் இருக்கையில் எழுந்து நின்றிருக்கிறார் பவானி.
காரில் பாட்டு போட்டு கேட்டுக் கொண்டே அனைவரும் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். அப்படி டான்ஸ் ஆடியபோது பவானியின் உடை யாஷிகாவின் கண்களில் பட்டு மறைத்திருக்க வேண்டும். அப்பொழுது கார் யாஷிகாவின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
கார் மேற்கூரையை திறந்து இருக்கையில் நின்று கொண்டிருந்த பவானி தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
காரை ஓட்டிய யாஷிகா சீட் பெல்ட் போடவில்லையாம். செய்யதும், அமீரும் சீட் பெல்ட் போட்டிருந்ததால் பெரிதாக காயம் ஏற்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில் யாஷிகாவிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் அவரின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள். யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோழி பவானி இறந்தது யாஷிகாவுக்கு இதுவரை தெரியாது. அவர் எழுந்து நடக்க 2 மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 3 மாதங்கள் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறியிருக்கிறார்கள்.
யாஷிகாவின் இடுப்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.