ஆப்நகரம்

Year Ender 2022, Dhanush: ரஜினி தலையில் இடியை இறக்கிய தனுஷ், ஐஸ்வர்யா

Dhanush, Aishwarya Rajinikanth: 2022ம் ஆண்டு துவங்கிய வேகத்தில் ரஜினிகாந்தின் நிம்மதி போய்விட்டது. அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க முடியவில்லை.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 2 Dec 2022, 10:32 am
2022ம் ஆண்டு துவங்கிய சில நாட்களிலேயே தாங்கள் பிரிவதாக தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டனர்.
Samayam Tamil year ender 2022 dhanush aishwarya stun rajinikanth
Year Ender 2022, Dhanush: ரஜினி தலையில் இடியை இறக்கிய தனுஷ், ஐஸ்வர்யா



தனுஷ்

தனுஷுக்கும், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி திருமணம் நடந்தது. மூத்த மகன் யாத்ரா 2006ம் ஆண்டிலும், இளைய மகன் லிங்கா 2010ம் ஆண்டும் பிறந்தார்கள். யாத்ரா, லிங்கா என்றால் தாத்தா ரஜினிக்கு ரொம்ப பிடிக்கும். பேரன்களை தன் கண் முன்னாலேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு தனுஷை போயஸ் கார்டனில் வீடு கட்டுமாறு கூறினார் ரஜினி. அவரும் மாமாவின் பேச்சை கேட்டு ரஜினி வீட்டிற்கு எதிரேயே பங்களா கட்டும் வேலையை துவங்கினார்.

பிரிவு

பேரன்கள் தன் வீட்டிற்கு எதிரேயே வரப் போகிறார்கள் என்கிற சந்தோஷத்தில் இருந்தார் ரஜினி. இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி தாங்கள் பிரிவதாக தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். மகளையும், தனுஷையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிடலாம் என்று நம்பி அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

ரஜினி

பேரன்களை அடிக்கடி பார்க்கலாம் என்று ரஜினி நினைத்த நிலையில் அவர்களை அழைத்துக் கொண்டு அப்பா வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டார் ஐஸ்வர்யா. மகளின் இந்த முடிவால் ரஜினி நிம்மதி இழந்துவிட்டார். இருப்பினும் மகன்களுக்காக தனுஷுடன் சேர்ந்து வாழுமாறு ஐஸ்வர்யாவிடம் பேசினார் ரஜினி. அவரும் சரி என்று சொன்னதாக தகவல் வெளியானது.

அறிவிப்பு

திருமண நாள் அன்று தானும், ஐஸ்வர்யாவும் சேரப் போவதாக தனுஷ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மகன்கள் மீது அதிக பாசம் இருந்தாலும் மனைவியை பிரிந்து இப்படி தனியாக சுதந்திரமாக இருப்பது தான் பிடித்திருக்கிறது என தன் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் தெரிவித்தாராம் தனுஷ்.

ஐஸ்வர்யா

முன்னதாக சவுந்தர்யா தன் முதல் கணவரை விவாகரத்து செய்தபோதே எனக்கும் விவாகரத்து வேணும்பா என ஐஸ்வர்யா கேட்டாராம். என்ன விளையாடுறியா, இரண்டு மகன்களை வைத்துக் கொண்டு உங்களுக்கு உங்க சந்தோஷம் தான் முக்கியமாப் போச்சா என்று ரஜினி விளாசினாராம். இதையடுத்தே விவாகரத்து முடிவை கைவிட்டாராம் ஐஸ்வர்யா.

மகன்கள்

முன்பை போன்றே தற்போதும் யாத்ரா, லிங்காவை காரணம் காட்டி தனுஷையும், ஐஸ்வர்யாவும் சேர்த்து வைக்க முயற்சி செய்தார் ரஜினி. ஆனால் இம்முறை இருவருமே ரஜினியின் பேச்சை கேட்பதாக இல்லையாம். பிள்ளைகள் விஷயத்தில் சமாதானமாக இருக்கிறோம் என்று கூறினார்களாம். ஆனால் மீண்டும் சேர்வது பற்றி மட்டும் இருவரும் பிடிகொடுத்து பேசவில்லையாம்.

லால் சலாம்

தனுஷை பிரிந்த பிறகு தன் கெரியரில் கவனம் செலுத்து வருகிறார் ஐஸ்வர்யா. விக்ராந்த், விஷ்ணு விஷாலை வைத்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் கவுரவத் தோற்றத்தில் வருகிறார் ரஜினிகாந்த். மகன்கள் வளரட்டும் என கெரியரில் இருந்து பிரேக் எடுத்திருந்தார் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்