ஆப்நகரம்

Rajinikanth:நான் பெருசா நினைச்சதுலயே தோத்துட்டேனே: சோகத்தில் ரஜினி

ரஜினிகாந்த் எதை பெரிதாக நினைத்தாரோ அந்த விஷயத்தில் தோற்றுவிட்டதால் கவலையில் இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்களும் வருத்தப்படுகிறார்கள்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 30 Dec 2022, 4:43 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிம்மதி இல்லாமல் இருப்பதை பார்த்து அவரின் ரசிகர்களும் சந்தோஷமில்லாமல்
Samayam Tamil year ender 2022 rajinikanth tries hard and fails
Rajinikanth:நான் பெருசா நினைச்சதுலயே தோத்துட்டேனே: சோகத்தில் ரஜினி

இருக்கிறார்கள்.


ரஜினி

ரஜினிக்கு தன் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா தான் உலகம். மகள்களை நன்றாக படிக்க வைத்து, கெரியரும் அமைத்துக் கொடுத்தார். அவர்கள் விரும்பிய நபர்களையே திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தார். கெரியரை விட குடும்பம் தான் முக்கியம், கணவன், பிள்ளைகளை கவனித்துக் கொள்வது தான் உங்களின் முதல் கடமை என்று சொல்லி வளர்த்தார் ரஜினி.

சவுந்தர்யா

எதிர்பாராவிதமாக சவுந்தர்யா தன் காதல் கணவரை பிரிய வேண்டியதாகிவிட்டது. அதை புரிந்து கொண்ட ரஜினி மகளை ஆதரித்தார். மேலும் இரண்டாவது திருமணம் செய்து வைத்து சவுந்தர்யாவை செட்டில் செய்தார். நடிகரும், தொழில் அதிபருமான விசாகனை மணந்த சவுந்தர்யா, வீர் என்கிற ஆண் குழந்தையை அண்மையில் பெற்றெடுத்தார். கணவர், குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். அதை பார்த்து ரஜினியும் மகிழ்ச்சி அடைந்தார்.

ஐஸ்வர்யா

இளைய மகளை நினைத்து சந்தோஷப்பட்டாலும் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நினைத்து தான் ரஜினிக்கு கவலை. தனுஷ் தான் வேண்டும் என்று அடம்பிடித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா, 17 ஆண்டுகள் கழித்து கணவரை பிரிந்து வந்துவிட்டார். ஐஸ்வர்யாவையும், தனுஷையும் சேர்த்து வைக்க ரஜினியும் பெரு முயற்சி செய்தார். ஆனாலும் ஐஸ்வர்யாவும், தனுஷும் மீண்டும் சேரத் தயாராக இல்லை.

கவலை

மூத்த மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்பது தான் ரஜினியின் கவலை. தந்தையின் மனதை புரிந்து கொண்டபோதிலும் தனுஷுடன் சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று நினைக்கிறாராம் ஐஸ்வர்யா. பேரன்கள் யாத்ரா, லிங்கா தன் வீட்டில் இருப்பதால் மகிழ்ச்சி தான் என்றாலும் அவர்கள் எல்லாம் அப்பா, அம்மாவுடன் சேர்ந்து இல்லாமல் இருப்பதும் ரஜினிக்கு வருத்தம் அளிக்கிறதாம்.

கடவுள்

குழந்தைகளுக்காக சேர்ந்து வாழுங்கள் என ரஜினி சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. இனி எல்லாம் அவன் செயல் என்று கடவுளின் மீது பாரத்தை போட்டுவிட்டாராம் ரஜினி. தற்போது அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார்.

லால் சலாம்

மகள் ஐஸ்வர்யாவின் சந்தோஷத்திற்காக அவர் இயக்கும் லால் சலாம் படத்தில் கவுரத் தோற்றத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் ரஜினி. விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிக்கும் லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அப்பாவை இயக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்