ஆப்நகரம்

யேசுதாஸ், காஞ்சனாவுக்கு கர்நாடக அரசின் உயரிய விருது!

பாடகர் யேசுதாஸுக்கும், நடிகை காஞ்சனாவுக்கும் கர்நாடக அரசின் உயரிய விருதான ராஜ்யோத்சவா விருதை கர்நாடக முதல்வர் சித்தராமய்யா வழங்கி சிறப்பித்தார்.

TNN 4 Nov 2017, 1:17 am
பாடகர் யேசுதாஸுக்கும், நடிகை காஞ்சனாவுக்கும் கர்நாடக அரசின் உயரிய விருதான ராஜ்யோத்சவா விருதை கர்நாடக முதல்வர் சித்தராமய்யா வழங்கி சிறப்பித்தார்.
Samayam Tamil yesudas kanchana award karnataka government
யேசுதாஸ், காஞ்சனாவுக்கு கர்நாடக அரசின் உயரிய விருது!


கர்நாடக மாநில அரசால் வழங்கப்படும் ராஜ்யோத்சவா விருது உயரிய விருதாகும். பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் உருவானதை நினைவுகூறும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாட மாநிலம் உருவாகி 62 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்த 62 பேருக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கர்நாடக அரசு கவுரவித்தது.

இதில் திரைப்படத்துறையிலிருந்து பழம்பெரும் நடிகை காஞ்சனாவும், பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாசும் இந்த விருதை பெற்றார்கள். பெங்களூவில் உள்ள ரவீந்திரா கலாஷேத்திராவில் நடந்த விழாவில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமய்யா இந்த விருதுகளை வழங்கினார்.

கர்நாடக கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் உமாஜி விருது பெறுகிறவர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு முதல்வர் சித்தராமய்யா ஒரு லட்சம் ரொக்கம், 20 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட கேடயம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமான காஞ்சனா, தமிழ், மற்றும் கன்னடத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கே.ஜே.யேசுதாஸ் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்