தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. அவர் ஒரு படத்தில் நடித்து இருந்தாலே அந்த படத்தில் காமெடி சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்பும் அளவிற்கு அவர் தொடர்ந்து அனைவரையும் காமெடியால் ஈர்த்து வருகிறார்.
பெரிய ஹீரோ படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்திலும் அவர் தொடர்ந்து நடித்து கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வருகிறார். கொரோனா பிரச்சனை வராமல் இருந்திருந்தால் இந்த வருடம் அவரது பல படங்கள் ரிலீஸாகி இருக்கும். மேலும் அவரது கைவசம் பல்வேறு படங்கள் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று யோகி பாபுவின் புகைப்படம் ஒன்றுடன் தெளலத் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் படம் 'மிக விரைவில்' ரிலீஸ் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆன நிலையில், அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என யோகி பாபு ட்விட்டரில் விளக்கம் கூறி இருக்கிறார்.
"இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி ஒரு அறிவிப்பு யோகி பாபு தரப்பிலிருந்து வெளிவந்திருப்பது ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு யோகி பாபு பேசும் போது தான் மிகச் சிறிய ரோல்களில் நடந்திருக்கும் படங்களில் கூட நான் ஹீரோவாக நடித்தது போல போஸ்டர் போட்டு ப்ரமோஷன் செய்கிறார்கள். இதனால் நான் நடித்து வரும் மற்ற படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் யோகி பாபு மெயின் ரோலில் நடித்திருப்பதாக சித்தரித்து தெளலத் என்ற படத்தின் போஸ்டர் வெளிவந்திருக்கிறது. அதை பார்த்து யோகி பாபுவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டதால் தான் அதைப் பற்றி உடனே ட்விட்டரில் பேசியிருக்கிறார். தனக்கும் அந்த படத்திற்கு எந்த சம்பந்தமில்லை என குறிப்பிட்டிருக்கும் அவர், படக்குழு ஏன் இப்படி ஒரு போஸ்ட் வெளியிட்டு இருக்கிறது என தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதனால் அந்த பட குழுவுக்கும் யோகி பாபுவுக்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தெளலத் படத்தினை சக்தி சிவன் என்ற இயக்குனர் இயக்கி இருக்கிறார். அதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கிய ரோல்களில் ராஷ்மி கௌதம், ஜெய பாலன், ஐசக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
யோகி பாபு காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி முக்கிய ரோல்களிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தான் ஹீரோ இல்லை என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் காமெடியனாக மட்டுமே தொடர்ந்த நடிப்பேன் என்றும், எப்போதும் ஹீரோவாக நடிக்கும் ஆசை இல்லை என்றும் அவர் பேட்டிகளில் கூறி வருகிறார்.
இந்நிலையில் அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ஒரு படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கிற தகவல் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் அந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
விஜய்யின் மாஸ்டருக்காக விஜய் சேதுபதி பார்த்த வேலையை பார்த்தீங்களா?
பெரிய ஹீரோ படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்திலும் அவர் தொடர்ந்து நடித்து கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வருகிறார். கொரோனா பிரச்சனை வராமல் இருந்திருந்தால் இந்த வருடம் அவரது பல படங்கள் ரிலீஸாகி இருக்கும். மேலும் அவரது கைவசம் பல்வேறு படங்கள் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று யோகி பாபுவின் புகைப்படம் ஒன்றுடன் தெளலத் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் படம் 'மிக விரைவில்' ரிலீஸ் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆன நிலையில், அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என யோகி பாபு ட்விட்டரில் விளக்கம் கூறி இருக்கிறார்.
"இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி ஒரு அறிவிப்பு யோகி பாபு தரப்பிலிருந்து வெளிவந்திருப்பது ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு யோகி பாபு பேசும் போது தான் மிகச் சிறிய ரோல்களில் நடந்திருக்கும் படங்களில் கூட நான் ஹீரோவாக நடித்தது போல போஸ்டர் போட்டு ப்ரமோஷன் செய்கிறார்கள். இதனால் நான் நடித்து வரும் மற்ற படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் யோகி பாபு மெயின் ரோலில் நடித்திருப்பதாக சித்தரித்து தெளலத் என்ற படத்தின் போஸ்டர் வெளிவந்திருக்கிறது. அதை பார்த்து யோகி பாபுவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டதால் தான் அதைப் பற்றி உடனே ட்விட்டரில் பேசியிருக்கிறார். தனக்கும் அந்த படத்திற்கு எந்த சம்பந்தமில்லை என குறிப்பிட்டிருக்கும் அவர், படக்குழு ஏன் இப்படி ஒரு போஸ்ட் வெளியிட்டு இருக்கிறது என தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதனால் அந்த பட குழுவுக்கும் யோகி பாபுவுக்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தெளலத் படத்தினை சக்தி சிவன் என்ற இயக்குனர் இயக்கி இருக்கிறார். அதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கிய ரோல்களில் ராஷ்மி கௌதம், ஜெய பாலன், ஐசக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
யோகி பாபு காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி முக்கிய ரோல்களிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தான் ஹீரோ இல்லை என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் காமெடியனாக மட்டுமே தொடர்ந்த நடிப்பேன் என்றும், எப்போதும் ஹீரோவாக நடிக்கும் ஆசை இல்லை என்றும் அவர் பேட்டிகளில் கூறி வருகிறார்.
இந்நிலையில் அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ஒரு படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கிற தகவல் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் அந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
விஜய்யின் மாஸ்டருக்காக விஜய் சேதுபதி பார்த்த வேலையை பார்த்தீங்களா?