ஆப்நகரம்

யோகி பாபுவின் அந்த தைரியம் தான் ரஜினியுடன் நேரடியாக மோத வைத்தது...

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

Samayam Tamil 12 Apr 2019, 2:56 pm
யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
Samayam Tamil Yogi babu


வடிவேலு, சந்தானம், சூரியை தொடர்ந்து தற்போது தமிழ் திரை உலகில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் காமெடி நடிகர் யோகி பாபு. தற்போது கிட்டத்தட்ட 18 படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் அவர் காமெடி கலந்த கதாநாயகன் வேடத்தில் நடித்து வருகின்றார்.

கடந்த வாரம் 'தர்மபிரபு’ பட டீசர் வெளியானது. இந்த படம் மே மாதம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து ‘கூர்கா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

புதிய அவதாரம்:
லொல்லு சபா நிகழ்ச்சியில் பல எபிசோடுகளுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய அனுபவமுள்ள யோகிபாபு, தற்போது ரோமியோ பிக்ஸர்ஸ் ராகுல் தயாரிக்கும், ராஜசேகர் இயக்கும் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி உள்ளார். இப்படத்தின் பூஜை முடிந்து படப்பிடிப்பு நடக்கிறது.

யோகி பாபுவின் கதை மீது நம்பிக்கை வைத்து படம் பொங்கல் அன்று வெளியாகும் என தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. ரஜினியின் தர்பார் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிவிக்கப்பட்டுள்ள நிலையில் யோகி பாபுவின் படம் நேரடியாக ரஜினி உடன் மோத உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்