ஆப்நகரம்

பா.ரஞ்சித் படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு?

பிஸி நடிகரான யோகி பாபு அடுத்து பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 May 2020, 3:23 pm
தமிழ் சினிமாவில் தற்போது டாப் காமெடியகனாக வலம் வருபவர் யோகி பாபு. அவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து உள்ளார். அவற்றிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அதனால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கிறார் அவர்.
Samayam Tamil Yogi Babu


பிஸியான காமெடியன் என்பதால் இரவு பகல் என மாறி மாறி அவர் படங்கள் நடித்து வந்ததும் அனைவருக்கும் தெரியும். கொரோனா லாக்டவுன் என்பதால் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில் அடுத்து பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு பா.ரஞ்சித் இரட்னு படங்களை தயாரித்துள்ளார். பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் தான் அது. அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதனை தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் ரஞ்சித் தயாரிக்கும் மூன்றாவது படம் படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. யோகி பாபு பரியேறும் பெருமாள் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் தயாரிப்பது ஒரு புறம் இருக்க இயக்குனராக பா.ரஞ்சித் சல்பேட்டா படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆர்யா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். வட சென்னையை சேர்ந்த பாக்சராக தான் ஆர்யா இந்த படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா நடிக்கிறார். போதை ஏறி புத்தி மாறி படத்தில் நடித்திருந்தவர் அவர். வட சென்னையில் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடைபெறவுள்ளது.

ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு உடனான படம் உறுதியானால் அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது கொரோனா லாக் டவுனால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது சின்னத்திரை சீரியல்கள் ஷூட்டிங்கிற்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. திரைப்படங்கள் ஷூட்டிங் செய்ய அனுமதி கிடைத்த பிறகு தான் யோகி பாபு படம் உட்பட அனைத்து படங்களும் மீண்டும் முழு வீச்சில் ஷூட்டிங் அனைத்தும் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கொரோனா பிரச்சனையால் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் தடைபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மஞ்சு பார்கவி என்பவரை கடந்த பிப்ரவரி 5ம் தேதி திருமணம் செய்து கொண்டார். மிக எளிமையாக திருமணம் நடைபெற்ற நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி ஏப்ரல் 9ம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தார். அதற்காக முதலமைச்சர் உட்பட பல பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் யோகி பாபு. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

யோகி பாபு இயக்குனராக அறிமுகம் ஆகிறார் வேண்டும் சமீபத்தில் செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவிற்காக அவர் ஒரு கதை வைத்திருப்பதாகவும், கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு மீண்டும் இணையவுள்ளனர் என்றும் கூறப்பட்டது. ஆனால் அது பற்றிய உறுதியான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வரவில்லை. சந்தனத்தில் டகால்டி படத்தினை தயாரித்த 18 Reels Productions நிறுவனத்தின் எஸ்பி சவுத்ரி தான் இந்த படத்தினை தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்