ஆப்நகரம்

யோகி பாபுவின் படப்பிடிப்பு தளத்தில் அடிதடி: போலீசார் வழக்குப்பதிவு!

யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'பொம்மை நாயகி' படப்பிடிப்பு தளத்தில் அவரின் உதவியாளர் மற்றும் கார் டிரைவர் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Dec 2021, 10:47 am
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழும் யோகிபாபு தன்னுடைய வித்தியாசமான நடிப்பாலும் நகைச்சுவை உணர்வாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து தொடர்ந்து நடித்து வரும் யோகி பாபு 'பொம்மை நாயகி' படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
Samayam Tamil Yogi Babu
Yogi Babu


யோகி பாபு 'மலையோரம் வீசும் காற்று' என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு போடிநாயக்கனூர் குரங்கணி, கொட்டகுடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் குரங்கணி மலைப்பகுதியில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குரங்கணி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது யோகி பாபுவின் உதவியாளர் சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த சதாம் உசேன் மற்றும் யோகி பாபுவின் கார் டிரைவர் சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சினிமா விமர்சகரை கிழித்து தொங்கவிட்ட 'முருங்கைக்காய் சிப்ஸ்' பட இயக்குனர்!
இருவரும் ஒருவருக்கொருவர் ஆவேசமாக திட்டிக்கொண்டு திடீரென்று கைகலப்பில் ஈடுபட்டனர். இருவரும் மோதிக் கொண்டதில் யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேனை கார் டிரைவர் ராமச்சந்திரன் மூக்கில் குத்தியதால் ரத்தக் காயம் ஏற்பட்டதாக யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேன் குரங்கணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து குரங்கணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். படப்பிடிப்பி தளத்தில் நடந்த இந்த எதிர்பாராத மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகி பாபு தற்போது அஜித்துடன் வலிமை, விஜய்யுடன் பீஸ்ட், விஷாலுடன் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்