ஆப்நகரம்

கமல்ஹாசனின் வீட்டில் ஏறி குதித்த இளைஞா் கைது

நடிகா் கமல்ஹாசன் வீட்டில் அத்துமீறி ஏறி குதித்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Samayam Tamil 30 Jun 2018, 1:56 pm
நடிகா் கமல்ஹாசன் வீட்டில் அத்துமீறி ஏறி குதித்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.
Samayam Tamil Kamal House.


நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் வீடு ஆழ்வாா் பேட்டையில் அமைந்தள்ளது. இங்கு தான் அவரது கட்சி அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனை பாா்ப்பதற்காக கடலூா் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சோ்ந்த சபரி நாதன் சென்றுள்ளாா். ஆனால் கமல்ஹாசன் இல்லை என்று வீட்டின் காவலாளி தெரிவித்துள்ளாா்.

சபரிநாதன் அதே இடத்தில் இந்துள்ளாா். பின்னா் காவலாளி இல்லாத நேரத்தில் வீட்டின் சுவரில் ஏறி வளாகத்தில் குதித்துள்ளாா். இருப்பினும் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் அந்த இளைஞா் திரும்பி வந்துவிட்டாா். இதனை கண்ட காவலாளி தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தொிவித்தாா். அதன் அடிப்படையில் காவல் துறையினா் சபரி நாதனை கைது செய்தனா்.

விசாரணையில் சபரி நாதன் சென்னையில் உள்ள பழக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறாா் என்றும், அவா் கமலஹாசனின் தீவிர ரசிகா் என்பதால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்