ஆப்நகரம்

Janani: மேக்கப் ரூமில் தனியாக இருந்தபோது இயக்குநர் என் மேல் கை வைத்தார்... பிரபல நடிகை பகீர்!

Janani: மேக்கப் ரூமில் இருந்தபோது இயக்குநர் தன்மீது கை வைத்தார் என பிரபல நடிகை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Aug 2022, 3:36 pm
மேக்கப் ரூமில் இருந்தபோது இயக்குநர் ஒருவர் தன் மீது கை வைத்தார் என பிரபல நடிகை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil youtuber and actress janani reveals adjustments in cinema
Janani: மேக்கப் ரூமில் தனியாக இருந்தபோது இயக்குநர் என் மேல் கை வைத்தார்... பிரபல நடிகை பகீர்!



பாலியல் தொல்லை

Me Too கலாச்சாரம் ஆரம்பித்ததில் இருந்து நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை பொது வெளியில் தைரியமாக கூறி வருகின்றனர். இதில் கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உலக சினிமா வரை பல பிரபலங்கள் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.

Gautham karthik: எஸ்... இந்த வருஷம் எனக்கு கல்யாணம்.. குட் நியூஸ் சொன்ன கவுதம் கார்த்திக்!

புயலை வீசும்

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி நடிகைகள் பலரும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மூலம் தாங்கள் அனுபவித்த இன்னல்களை கூறி வருகின்றனர். நடிகைகளின் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் சினிமா வட்டாரத்தில் அவ்வப்போது புயலை வீசிச் செல்லும்.

நடிகை ஜனனி

அந்த வகையில் தற்போது யூட்யூப் மூலம் பிரபலமான நடிகை ஜனனி இயக்குநர் ஒருவரால் தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். அதாவது நரிக்கூட்டம் யூட்யூப் சேனல் மூலம் பிரபலமான ஜனனி சினிமாவில் நடிக்க முயற்சித்துள்ளார். சினிமா வாய்ப்பும் கிடைக்க, ஆடிஷன் எல்லாம் முடிந்து படப்பிடிப்புக்கு தயாராக இருந்தாராம்.

Aditi Shankar: இவ்ளோ க்யூட்டா இருந்தா ஏன் ப்ரபோஸ் பண்ண மாட்டாங்க... அசர வைக்கும் அதிதி ஷங்கர்!

அட்ஜெஸ்ட் பண்ணனும்

அப்போது படக்குழுவை சேர்ந்த ஒருவர், எல்லாம் ஓகே நீங்கள்தான் ஹீரோயின். ஆனால் அதற்கு முன்பு நீங்கள் இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் ஹீரோவுடன் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறினாராம். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜனனி தனக்கு பட வாய்ப்பே வேண்டாம் என கூறியுள்ளார்.

அந்தப் பக்கம் நயன்தாரா... இந்தப் பக்கம் இவங்க!

15 லட்சம் வரை

அப்போது அவரிடம் 15 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுப்பதாக கூறி அவரை சம்மதிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தனக்கு வாய்ப்பே வேண்டாம் என விலகி வந்துள்ளார் ஜனனி. அதனை தொடர்ந்து வேறொரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் ஜனனி.

மேலே கை வைத்தார்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மேக்கப் ரூமில் இருந்த ஜனனியிடம் படத்தின் இயக்குநர் தவறாக நடக்க முயற்சி செய்தாராம். அந்தப் படத்தில் தன்னுடைய நண்பர்தான் ஹீரோ என்பதால் அவரிடம் நடந்ததை கூறிவிட்டு படத்தில் இருந்து விலகியுள்ளார் ஜனனி. அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒப்புக்கொள்ளாததால்தான் பட வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார் நடிகை ஜனனி. அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்