'பாகுபலி 2'-
பிரபாஸ், ராணா டகுபாட்டி, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர்,
TNN | 27 Jan 2018, 9:23 am
பாகுபலி முதல் பாகத்தின் கிளைமேக்ஸில், கட்டப்பா பாகுபலியை கொல்லும் காட்சி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது ரசிகர்கள் மனதில், ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? ’ என்ற கேள்வி அடிக்கடி எழுந்தது. ஆனால் இந்த கேள்விக்கான விடை, பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் மட்டுமே தெரியும் என்பதால், இந்த கேள்வி சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தது.
பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமெளலி கூட, இந்த கேள்விக்கான பதிலை கூற மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் பாகுபலி-2 படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்தவர்கள், கட்டப்பா ஏன் பாகுபலி கொன்றார்? என்ற கேள்விக்காக விடையை வெளியிட்டுள்ளனர்.
” மகிழ்மதியின் அரசனாக பதவியேற்கும் பல்லாலத்தேவன், பாகுபலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக பாகுபலி,பாகுபலியின் மனைவி தேவசேனா மற்றும் அவர்களின் குழந்தை ஆகியோரை சிறை பிடிக்கிறான். இவர்களில் யாராவது ஒருவரை கொலை செய்தால் மட்டுமே, மீதமிருக்கும் இருவரை விடுவிப்பதாக , மகிழ்மதி அரச வம்சத்தின் விசுவாசியான கட்டப்பாவிற்கு பல்லாலத்தேவன் நிபந்தனை விதிக்கிறான்.
’குழந்தையை கொலை செய்தால், பாகுபலியும் அவனது மனைவியும் உயிரை விட்டுவிடுவார்கள் அல்லது தேவ சேனாவை கொலை செய்தால், பாகுபலி உயிரை விட்டுவிடுவான். இதனால் குழந்தை அனாதையாகிவிடும். எனவே பாகுபலியை கொலை செய்தால் மட்டுமே, பாகுபலியின் வாரிசு,தேவ சேனாவின் அரவணைப்பில் வளர்ந்து மீண்டும் மகிழ்மதி அரசனாவான்.’ என கட்டப்பா முடிவு செய்கிறான். இதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல், பாகுபலியை கட்டப்பா கொலை செய்கிறான்.” என படத்தின் முதல் காட்சியை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமெளலி கூட, இந்த கேள்விக்கான பதிலை கூற மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் பாகுபலி-2 படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்தவர்கள், கட்டப்பா ஏன் பாகுபலி கொன்றார்? என்ற கேள்விக்காக விடையை வெளியிட்டுள்ளனர்.
” மகிழ்மதியின் அரசனாக பதவியேற்கும் பல்லாலத்தேவன், பாகுபலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக பாகுபலி,பாகுபலியின் மனைவி தேவசேனா மற்றும் அவர்களின் குழந்தை ஆகியோரை சிறை பிடிக்கிறான். இவர்களில் யாராவது ஒருவரை கொலை செய்தால் மட்டுமே, மீதமிருக்கும் இருவரை விடுவிப்பதாக , மகிழ்மதி அரச வம்சத்தின் விசுவாசியான கட்டப்பாவிற்கு பல்லாலத்தேவன் நிபந்தனை விதிக்கிறான்.
’குழந்தையை கொலை செய்தால், பாகுபலியும் அவனது மனைவியும் உயிரை விட்டுவிடுவார்கள் அல்லது தேவ சேனாவை கொலை செய்தால், பாகுபலி உயிரை விட்டுவிடுவான். இதனால் குழந்தை அனாதையாகிவிடும். எனவே பாகுபலியை கொலை செய்தால் மட்டுமே, பாகுபலியின் வாரிசு,தேவ சேனாவின் அரவணைப்பில் வளர்ந்து மீண்டும் மகிழ்மதி அரசனாவான்.’ என கட்டப்பா முடிவு செய்கிறான். இதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல், பாகுபலியை கட்டப்பா கொலை செய்கிறான்.” என படத்தின் முதல் காட்சியை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review