'டோரா'-திரை விமர்சனம்
நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா, சுலில் குமார்,
Samayam Tamil | 16 Mar 2018, 6:31 pm
கரு : ஒரு பழைய மாடல் காரையும் , புதிய மாடல் நயன்தாராவையும் தனதாக்கி வைத்துக் கொண்டு , தன்னைக் பலாத்கரம் செய்து கொன்றவர்களை பழி தீர்க்கும் எட்டு வயது சிறுமி தான் கரு.
கதை : முன்பு தன் அப்பாவும் , குடும்பமும் செய்த உதவியால் பல கார் களுடன் கால்டாக்ஸி நிறுவனம் நடத்தி துட்டு பார்க்கும், தன் அத்தையும் , அத்தை வீட்டுக்காரரும் தனக்கும் , தன் அப்பாவுக்கும் தகுந்த மரியாதை தராததால் பொங்கி எழும் நயன்தாரா , தானும் ஒரு கால் டாக்ஸி முதலாளி ஆகி , அத்தை மாமா நிறுவனத் தை இழுத்து மூடவேண்டும் என்று தன் அப்பா தம்பி ராமைய்யா வை உசுப்பி விட்டு, இருந்த காசை எல்லாம் போட்டு பழைய மாடல் கார் ஒன்றை வாங்கி வாங்கி விடுகிறார்.
அந்தக் காருக்கும் அவருக்கும் மிகவும் பரிட்சையமான ஒரு எட்டு வயது சிறுமியின் ஆவி , தன்னை பலாத்கரம் செய்து அடித்துக் கொன்றவர்களை நயன் தாரா மூலமாகவும் , தான் வளர்த்து வந்த அந்த காம வெறி பிடித்த கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட நாயின் மூலமாகவும், அந்தக் பழைய காலத்து காரை பயன்படுத்தி எப்படி விரட்டி , விரட்டி பழி தீர்க்கிறது என்பதுதான் "டோரா " படத்தின் கதை மொத்தமும்.
காட்சிப்படுத்தல் : நயன்தாரா , கதையின் நாயகியாக நடிக்க , அவருடன் அமானுஷ்ய சக்திகள் நிரம்பிய ஒரு பழைய காலத்து காரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க நேமிசந்த் ஜபக் ,வி .ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட , 'ஏ.சற்குணம் சினிமாஸ்' ஏ.நந்தகுமார் வழங்க, தமிழகம் முழுமைக்கும் அவுரா சினிமாஸ் ரிலீஸ் செய்ய ,தாஸ் இராமசாமி இயக்கத்தில் வந்திருக்கும் படமான "டோரா "-வில் சிறுமியின் ஆன்மா வரும் காட்சிகள் கிராபிக்ஸ், சி.ஜி உபயத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் சீன்கள் மிரட்டல்
கதை நாயகி : நயன்தாரா , பவளக்கொடி எனும் பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்து இருக்கிறார், "குடிக்கத் தருவோம் பழரசம் ... எங்கள் குவாலிட்டியில் இல்லை சமரசம் " என்றபடி அவர் தன் கால் டாக்சி கம்பெனி விளம்பரமாக கண்டுபிடிக்கும் வாசகத்தில் தொடங்கி , தூக்கத்தில் தந்தையை உதைப்பது , சிறுமி ஆவி உடம்பில் இறங்கியதும் இன்ஸ்பெக்டரை கலாய்ப்பது , பழைய காலத்து காருடன் போராடுவது என சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார். வாழ்த்துக்கள் அம்மணி.
கதாநாயகர் : படத்தில் கதாநாயகர் என்று யாருமே கிடையாது .ஆனால் இன்ஸ்பெக்டராக வரும் ஹரீஸ் உத்தமனுக்கு நயனுடன் நாயகராக ஜோடி போட வாய்ப்புக் கிடைத்தும் ,அதை விடுத்து , நடு இராத்திரி, நயன் வீட்டு சுவர் ஏறி குதித்து தூங்கி கொண்டிருந்த நயனை இழுத்து வந்து ஸ்டேஷனில் வைத்து மிரட்டி உருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார் என்பது கொடுமை.
பிற நட்சத்திரங்கள் :அழகிய நயனின் , அசத்தல் அப்பாவாக தம்பி ராமையா ,சில இடங்களில் மட்டும் சிரிக்க வைத்து , பிற இடங்களில் பேசியே கொல்கிறார். காமவெறி பிடித்த கொள்ளையர்களாக ,கொடூரனாக கொலைகாரர்களாக வரும் சுலீலி குமார் , ஷான் ,வெற்றி உள்ளிட்டோர் பயமுறுத்தி இருக்கின்றனர் . எட்டு வயது சிறுமியாக வரும் பேபி யோக்தாவிற்கு எந்த குழந்தைக்கும் நேரக் கூடாத கொடூரம் நடப்பது பரிதாபப்பட வைக்கிறது .
தொழில்நுட்பகலைஞர்கள் : கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு , பாடாவதி தொகுப்பு. தினேஷ் கிருஷ்ணன் .பி ,யின் ஒளிப்பதிவும், விவேக் - மெர்வின் இசையும் இப்படக்கதைக்கு ஏற்ற திகில் மிரட்டல் .
பலம் : நயன்தாரா ,
பலவீனம் : ’டோரா " படத்திற்கு 'ஏ' சர்ட்டிபிகேட் என்பதும் ,சமீப காலமாக அதிகரித்து வரும் பேய் கதைகளில் பத்தோ டு பதினொன்றாக இதுவும் ஒன்று என்பதும் பெரும் பலவீனம் .
இயக்கம் : தாஸ் இராமசாமியின் எழுத்து , இயக்கத்தில் , குலதெய்வம் கோயிலுக்கு நயனும் , அவரது அப்பா தம்பி ராமைய்யாவும் நடுஇரவில் சாமி கும்பிட செல்வது மற்றும் சாலையில் நயன் கார் ஓட்டிச் சென்று, அந்த நாயின் ஆவியால் செய்யும் முதல் கொலையின் சாலையோர காமிரா பதிவுகளை அழிக்கும் சிறுமியின் ஆன்மா . மேலும் , க்ளைமாக்ஸில் வில்லனால் அடித்து உடைக்கப்படும் காரை தன் மாய சக்தியால் பழைய நிலைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட சாகசங்களை எல்லாம் செய்யும் சிறுமியின் ஆன்மா , நயன்தாராவையே ,அவரது கார் டயர் தடத்தை மறைக்க வேறு டயரைமாற்ற விடுவதும் , காரில் இருந்து தவறி விழுந்த அந்த பழைய காலத்து கார் ரேடியேட்டர் மூடியை மட்டும் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்காதது, நயன் போலீசில் மாட்டக்காரணமாவதும் உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகளை ரசிகன் கவனத்தில் கொள்ளாது விட்டால் "டோரா " - தேறும்!
பைனல்" பன்ச் ": "டோரா ' -' அழகிய நயன் தாரா .... ஆனால் , மொத்தப் படமும் 'ஜோரா ?' ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!" '
Dora- Movie Review
கதை : முன்பு தன் அப்பாவும் , குடும்பமும் செய்த உதவியால் பல கார் களுடன் கால்டாக்ஸி நிறுவனம் நடத்தி துட்டு பார்க்கும், தன் அத்தையும் , அத்தை வீட்டுக்காரரும் தனக்கும் , தன் அப்பாவுக்கும் தகுந்த மரியாதை தராததால் பொங்கி எழும் நயன்தாரா , தானும் ஒரு கால் டாக்ஸி முதலாளி ஆகி , அத்தை மாமா நிறுவனத் தை இழுத்து மூடவேண்டும் என்று தன் அப்பா தம்பி ராமைய்யா வை உசுப்பி விட்டு, இருந்த காசை எல்லாம் போட்டு பழைய மாடல் கார் ஒன்றை வாங்கி வாங்கி விடுகிறார்.
அந்தக் காருக்கும் அவருக்கும் மிகவும் பரிட்சையமான ஒரு எட்டு வயது சிறுமியின் ஆவி , தன்னை பலாத்கரம் செய்து அடித்துக் கொன்றவர்களை நயன் தாரா மூலமாகவும் , தான் வளர்த்து வந்த அந்த காம வெறி பிடித்த கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட நாயின் மூலமாகவும், அந்தக் பழைய காலத்து காரை பயன்படுத்தி எப்படி விரட்டி , விரட்டி பழி தீர்க்கிறது என்பதுதான் "டோரா " படத்தின் கதை மொத்தமும்.
காட்சிப்படுத்தல் : நயன்தாரா , கதையின் நாயகியாக நடிக்க , அவருடன் அமானுஷ்ய சக்திகள் நிரம்பிய ஒரு பழைய காலத்து காரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க நேமிசந்த் ஜபக் ,வி .ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட , 'ஏ.சற்குணம் சினிமாஸ்' ஏ.நந்தகுமார் வழங்க, தமிழகம் முழுமைக்கும் அவுரா சினிமாஸ் ரிலீஸ் செய்ய ,தாஸ் இராமசாமி இயக்கத்தில் வந்திருக்கும் படமான "டோரா "-வில் சிறுமியின் ஆன்மா வரும் காட்சிகள் கிராபிக்ஸ், சி.ஜி உபயத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் சீன்கள் மிரட்டல்
கதை நாயகி : நயன்தாரா , பவளக்கொடி எனும் பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்து இருக்கிறார், "குடிக்கத் தருவோம் பழரசம் ... எங்கள் குவாலிட்டியில் இல்லை சமரசம் " என்றபடி அவர் தன் கால் டாக்சி கம்பெனி விளம்பரமாக கண்டுபிடிக்கும் வாசகத்தில் தொடங்கி , தூக்கத்தில் தந்தையை உதைப்பது , சிறுமி ஆவி உடம்பில் இறங்கியதும் இன்ஸ்பெக்டரை கலாய்ப்பது , பழைய காலத்து காருடன் போராடுவது என சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார். வாழ்த்துக்கள் அம்மணி.
கதாநாயகர் : படத்தில் கதாநாயகர் என்று யாருமே கிடையாது .ஆனால் இன்ஸ்பெக்டராக வரும் ஹரீஸ் உத்தமனுக்கு நயனுடன் நாயகராக ஜோடி போட வாய்ப்புக் கிடைத்தும் ,அதை விடுத்து , நடு இராத்திரி, நயன் வீட்டு சுவர் ஏறி குதித்து தூங்கி கொண்டிருந்த நயனை இழுத்து வந்து ஸ்டேஷனில் வைத்து மிரட்டி உருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார் என்பது கொடுமை.
பிற நட்சத்திரங்கள் :அழகிய நயனின் , அசத்தல் அப்பாவாக தம்பி ராமையா ,சில இடங்களில் மட்டும் சிரிக்க வைத்து , பிற இடங்களில் பேசியே கொல்கிறார். காமவெறி பிடித்த கொள்ளையர்களாக ,கொடூரனாக கொலைகாரர்களாக வரும் சுலீலி குமார் , ஷான் ,வெற்றி உள்ளிட்டோர் பயமுறுத்தி இருக்கின்றனர் . எட்டு வயது சிறுமியாக வரும் பேபி யோக்தாவிற்கு எந்த குழந்தைக்கும் நேரக் கூடாத கொடூரம் நடப்பது பரிதாபப்பட வைக்கிறது .
தொழில்நுட்பகலைஞர்கள் : கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு , பாடாவதி தொகுப்பு. தினேஷ் கிருஷ்ணன் .பி ,யின் ஒளிப்பதிவும், விவேக் - மெர்வின் இசையும் இப்படக்கதைக்கு ஏற்ற திகில் மிரட்டல் .
பலம் : நயன்தாரா ,
பலவீனம் : ’டோரா " படத்திற்கு 'ஏ' சர்ட்டிபிகேட் என்பதும் ,சமீப காலமாக அதிகரித்து வரும் பேய் கதைகளில் பத்தோ டு பதினொன்றாக இதுவும் ஒன்று என்பதும் பெரும் பலவீனம் .
இயக்கம் : தாஸ் இராமசாமியின் எழுத்து , இயக்கத்தில் , குலதெய்வம் கோயிலுக்கு நயனும் , அவரது அப்பா தம்பி ராமைய்யாவும் நடுஇரவில் சாமி கும்பிட செல்வது மற்றும் சாலையில் நயன் கார் ஓட்டிச் சென்று, அந்த நாயின் ஆவியால் செய்யும் முதல் கொலையின் சாலையோர காமிரா பதிவுகளை அழிக்கும் சிறுமியின் ஆன்மா . மேலும் , க்ளைமாக்ஸில் வில்லனால் அடித்து உடைக்கப்படும் காரை தன் மாய சக்தியால் பழைய நிலைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட சாகசங்களை எல்லாம் செய்யும் சிறுமியின் ஆன்மா , நயன்தாராவையே ,அவரது கார் டயர் தடத்தை மறைக்க வேறு டயரைமாற்ற விடுவதும் , காரில் இருந்து தவறி விழுந்த அந்த பழைய காலத்து கார் ரேடியேட்டர் மூடியை மட்டும் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்காதது, நயன் போலீசில் மாட்டக்காரணமாவதும் உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகளை ரசிகன் கவனத்தில் கொள்ளாது விட்டால் "டோரா " - தேறும்!
பைனல்" பன்ச் ": "டோரா ' -' அழகிய நயன் தாரா .... ஆனால் , மொத்தப் படமும் 'ஜோரா ?' ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!" '
Dora- Movie Review
Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review