இருமுகன் - திரைவிமர்சனம்
விக்ரம் , நயன்தாரா, நித்யா மேனன் , தம்பி ராமைய்யா , கருணாகரன் , நாசர், ரித்விகா
SamayamTamil | 11 Mar 2018, 3:33 pm
கரு: ஊக்க மருந்தால் உலகத்தை ஆள நினைக்கும் வில்லன் விக்ரமை ஹீரோ விக்ரம் உருக்குலைக்கும் கரு.
கதை: இந்திய உளவு பிரிவான 'ரா'வில் வேலை பார்த்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அதே 'ரா ' ஏஜென்சியில் தன்னுடன் வேலை பார்த்த தன் காதலி நயன்தாராவை கண்முன் பறிகொடுத்ததாலும் தன் கோபதாபத்தாலும்' ரா' உளவு வேலையை உதறி விட்டு உலகம் சுற்றுகிறார் விக்ரம் .
இந்நிலையில் .,மலேசிய இந்திய தூதரகத்தை தனி ஆளாக தாக்கி இருபதுக்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை கொடூரமாக கொன்று தானும் சாகிறான் .ஒரு தள்ளாத வயதுடைய சீனக்கிழவன் .அவன் யார்? அவனது பின்னணி என்ன ..? என ஆராயும் இந்திய 'ரா' உளவுப் பிரிவு ., அவன் லவ் எனும் தலைவனைக் கொண்ட சிம்பிள் ஆப் லவ் எனும் குழுவைச் சார்ந்தவர்களால் ஏவிவிடப்பட்ட வன் ...எனும் உண்மையை கண்டுபிடிக்கிறது .
சிம்பிள் ஆப் லவ் குழுவின் தலைவன் லவ்வால் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன் தன் காதல் மனைவி நயன்தாராவை இழந்திருக்கிறார் ரா உளவு ஏஜன்சி அதிகாரி விக்ரம் .எனவே , உலகம் சுற்றும் அவரை கண்டுபிடித்து .,அவர் வசம் இந்த கேஸை ஒப்படைத்து அவரது மேல் அதிகாரியாக நித்யா மேனனையும் நியமித்து மலேசியா அனுப்புகிறது இந்தியா .
தன் கண் முன் காதலி இழப்பாலும் தன் நடத்தையாலும் .,தான் சார்ந்த இந்திய "ரா" பிரிவு உளவு பாதுகாப்பு ஏஜென்சியில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் விலகிய , விலக்கப்பட்ட ...விக்ரம் ., மீண்டும் அந்த ஏஜன்சியில் இணைந்து ,இந்தியாவின் திறமையை, பெருமையை மலேசியாவில் எப்படி? நிலை நாட்டி ., இந்திய தூதரக தாக்குதலுக்கும் , தன் காதல் மனைவி சாவுக்கும் காரணமான ' சிம்பிள் ஆப் லவ் 'கும்பல் தலைவன் லவ் ' வையும் அவனது ஊக்க மருந்து பிஸினஸ்ஸையும் வேறருக்கிறார் ...? என்பது தான் இருமுகன் படத்தின் கதை . இந்த ,கதையுடன் விக்ரம் - நயனின் லவ் எபிசோட்டையும்., இப்படத்திற்கு வில்லனும் , ஹீரோவுமாகிய "இருமுகன்" விக்ரம் தான் பெயர் காரணம் என்பதையும் ,அதன் கூடவே .,ஸ்பீட் எனும் ஊக்க மருந்தின் வீரியத்தால் மனித உடலில் நிகழும் மாற்றங்களையும் அதனால் நிகழும் அதிரடிகளையும் ...கலந்து கட்டி இருமுகனாக்கியிருக்கின்றனர் .
காட்சிப்படுத்தல்: விக்ரம் , நயன்தாரா, நித்யா மேனன் , தம்பி ராமைய்யா , கருணாகரன் , நாசர், ரித்விகா ... உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க., ஹாரிஷ்ஜெயராஜ் இசையில , ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ' ஷிபு தமின்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் மெகா பட்ஜெட் படமான" இருமுகன் ". படத்தில், நாயகர் விக்ரமை இரு முகனாகவும் நாயகி நயன்தாராவை கொஞ்ச நேரம் இருமுகியாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ரசனை.
கதாநாயகர்: அகிலனாக , அகிலன் வினோத்தாக விக்ரம் ., ஆரம்ப அறிமுக காட்சியில் குத்துசண்டை வீரராக கும்மாங்குத்து வாங்கி பின் குத்துகிறார். அதன் பின் இந்திய ' ரா' உளவுப் பிரிவு ஏஜென்சி வீரராக ஏதேதோ செய்கிறார். அவரை விட வில்லன் லவ் வாக அழகிய பெண் சாயலில் வரும் விக்ரம் பிய்த்து பெடலெடுக்கிறார். அதிலும் , உதட்டை குவித்து முகத்தை அஷ்ட கோணலாக்கி லவ் விக்ரம் அடிக்கடி செய்யும் சேட்டைகள் தாங்கலை சாமி ... "அவ்வை சண்முகி" கமலில் ஆரம்பித்து "ரெமோ " படத்தில் சிவகார்த்தி போட்டு நடித்து வரும் நர்ஸ் கெட்-அப் வரை எதையும் விட்டு வைக்கவில்லை ... விக்ரம் என்னும் அளவிற்கு வித்தியாசம் விரும்பும் தன் ரசிகர்களுக்கு வேண்டியதை தந்திருக்கிறார்.... மனிதர்!
கதாநாயகியர் : நயன்தாரா வழக்கம் போலவே அழகு பதுமையாக வருகிறார். நயனையும்அவரது அழகையும் ப்ளாஷ்பேக்கில் மட்டுமே பார்க்கிறோமே ? என வருந்தும் ரசிகனுக்கு ஆறுதலாக நயனும் இரு முகியாக வருவது நம்பதாங்க முடியாத திகில் திருப்பம்.
இரண்டாவது நாயகி நித்யா மேனன் ,இக்கட்டான சூழலில் ரித்விகா குண்டடிபட்டு இறந்ததற்காக விவாதம் செய்வது கொடுமை . மற்றபடி , அழகிய "ரா" உளவுப் பிரிவு ஆபிஸராக நயன் இல்லாத இடங்களில் அசத்துகிறார்.
காமெடிநாயகர்: கருணாகரன் ஊக்க மருந்து பற்றி சொல்லும் இடம் படத்திற்கு என்ன தான் முக்கியம் என்றாலும்., அக் காட்சி படத்தின் விறுவிறுப்பை வெகுவாக குறைப்பது பலவீனம்.
பிற நட்சத்திரங்கள்: தம்பி ராமைய்யா , நாசர் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். எனும் அளவில் இருக்கிறார்கள் பாவம்!
தொழில்நுட்பகலைஞர்கள்: ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் 'ஹலோனா ஹலோனா .....', "அய்யோ நெஞ்சிலே .....", "கண்ணை விட்டு ... " உள்ளிட்ட பாடல்களும் அவை கடற்கரை பிரதேசம் மற்றும் காஷ்மீர் பிரதேச பகுதி களில் படமாக் கப்பட்டிருக்கும் விதமும் படத்திற்கு பலம். அன்பறிவ்வின் சண்டைப் பயிற்சியும் ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும்பலம் .
பலம்: இத்திரைப்படம், மலேசியா இந்திய தூதரகத்தில் ஆரம்பமாகிறது .... என்பதையும் பாடல் காட்சிகள் பல்வேறு இயற்கை எழில் கொஞ்சும் உள்நாட்டு , வெளிநாட்டு லொகேஷன்களில் படமாகி இருக்கிறது ...என்னும் பிரமாண்டமும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும் பலம். அதே மாதிரி,மருந்து உபயத்தில் ஐந்து நிமிடம்பறந்து பறந்து அடிக்கும் வில்லன் லவ் விக்ரமையும், அவரது சகாக்களையும் அகிலன் விக்ரம் போட்டுத் தாக்கி ஜெயிப்பது தமிழ் சினிமா வுக்கு புதுசு.இரண்டு விக்ரமின் நடை , உடை , பாவனை எல்லாம் மேலும் பலம்.
பலவீனம்: லாஜிக் இல்லா வில்லன் மற்றும் ஹீரோ விக்ரம் இடேயேயான காட்சிகள் பெரும் பலவீனம்.
இயக்கம்: ஆனந்த் ஷங்கரின் இயக்கத்தில் ஒரு சில லாஜிக் மீறல்கள் , குறைகள் இருந்தாலும் , "உன்னோட தேவைக்காக என்னோட நேரத்தோட விளையாடாத..." உள்ளிட்ட டயலாக்குகள் திரும்பி பார்க்க வைக்கின்றன.
பைனல் 'பன்ச்': ஆக மொத்தத்தில் ., ஆனந்த் ஷங்கரின் எழுத்து , இயக்கத்தில்., அடிக்கடி, "பன்முகனா'க தெரியும் விக்ரமின் 'இருமுகன் 'தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் 'புதுமுகன்!'
கதை: இந்திய உளவு பிரிவான 'ரா'வில் வேலை பார்த்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அதே 'ரா ' ஏஜென்சியில் தன்னுடன் வேலை பார்த்த தன் காதலி நயன்தாராவை கண்முன் பறிகொடுத்ததாலும் தன் கோபதாபத்தாலும்' ரா' உளவு வேலையை உதறி விட்டு உலகம் சுற்றுகிறார் விக்ரம் .
இந்நிலையில் .,மலேசிய இந்திய தூதரகத்தை தனி ஆளாக தாக்கி இருபதுக்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை கொடூரமாக கொன்று தானும் சாகிறான் .ஒரு தள்ளாத வயதுடைய சீனக்கிழவன் .அவன் யார்? அவனது பின்னணி என்ன ..? என ஆராயும் இந்திய 'ரா' உளவுப் பிரிவு ., அவன் லவ் எனும் தலைவனைக் கொண்ட சிம்பிள் ஆப் லவ் எனும் குழுவைச் சார்ந்தவர்களால் ஏவிவிடப்பட்ட வன் ...எனும் உண்மையை கண்டுபிடிக்கிறது .
சிம்பிள் ஆப் லவ் குழுவின் தலைவன் லவ்வால் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன் தன் காதல் மனைவி நயன்தாராவை இழந்திருக்கிறார் ரா உளவு ஏஜன்சி அதிகாரி விக்ரம் .எனவே , உலகம் சுற்றும் அவரை கண்டுபிடித்து .,அவர் வசம் இந்த கேஸை ஒப்படைத்து அவரது மேல் அதிகாரியாக நித்யா மேனனையும் நியமித்து மலேசியா அனுப்புகிறது இந்தியா .
தன் கண் முன் காதலி இழப்பாலும் தன் நடத்தையாலும் .,தான் சார்ந்த இந்திய "ரா" பிரிவு உளவு பாதுகாப்பு ஏஜென்சியில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் விலகிய , விலக்கப்பட்ட ...விக்ரம் ., மீண்டும் அந்த ஏஜன்சியில் இணைந்து ,இந்தியாவின் திறமையை, பெருமையை மலேசியாவில் எப்படி? நிலை நாட்டி ., இந்திய தூதரக தாக்குதலுக்கும் , தன் காதல் மனைவி சாவுக்கும் காரணமான ' சிம்பிள் ஆப் லவ் 'கும்பல் தலைவன் லவ் ' வையும் அவனது ஊக்க மருந்து பிஸினஸ்ஸையும் வேறருக்கிறார் ...? என்பது தான் இருமுகன் படத்தின் கதை . இந்த ,கதையுடன் விக்ரம் - நயனின் லவ் எபிசோட்டையும்., இப்படத்திற்கு வில்லனும் , ஹீரோவுமாகிய "இருமுகன்" விக்ரம் தான் பெயர் காரணம் என்பதையும் ,அதன் கூடவே .,ஸ்பீட் எனும் ஊக்க மருந்தின் வீரியத்தால் மனித உடலில் நிகழும் மாற்றங்களையும் அதனால் நிகழும் அதிரடிகளையும் ...கலந்து கட்டி இருமுகனாக்கியிருக்கின்றனர் .
காட்சிப்படுத்தல்: விக்ரம் , நயன்தாரா, நித்யா மேனன் , தம்பி ராமைய்யா , கருணாகரன் , நாசர், ரித்விகா ... உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க., ஹாரிஷ்ஜெயராஜ் இசையில , ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ' ஷிபு தமின்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் மெகா பட்ஜெட் படமான" இருமுகன் ". படத்தில், நாயகர் விக்ரமை இரு முகனாகவும் நாயகி நயன்தாராவை கொஞ்ச நேரம் இருமுகியாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ரசனை.
கதாநாயகர்: அகிலனாக , அகிலன் வினோத்தாக விக்ரம் ., ஆரம்ப அறிமுக காட்சியில் குத்துசண்டை வீரராக கும்மாங்குத்து வாங்கி பின் குத்துகிறார். அதன் பின் இந்திய ' ரா' உளவுப் பிரிவு ஏஜென்சி வீரராக ஏதேதோ செய்கிறார். அவரை விட வில்லன் லவ் வாக அழகிய பெண் சாயலில் வரும் விக்ரம் பிய்த்து பெடலெடுக்கிறார். அதிலும் , உதட்டை குவித்து முகத்தை அஷ்ட கோணலாக்கி லவ் விக்ரம் அடிக்கடி செய்யும் சேட்டைகள் தாங்கலை சாமி ... "அவ்வை சண்முகி" கமலில் ஆரம்பித்து "ரெமோ " படத்தில் சிவகார்த்தி போட்டு நடித்து வரும் நர்ஸ் கெட்-அப் வரை எதையும் விட்டு வைக்கவில்லை ... விக்ரம் என்னும் அளவிற்கு வித்தியாசம் விரும்பும் தன் ரசிகர்களுக்கு வேண்டியதை தந்திருக்கிறார்.... மனிதர்!
கதாநாயகியர் : நயன்தாரா வழக்கம் போலவே அழகு பதுமையாக வருகிறார். நயனையும்அவரது அழகையும் ப்ளாஷ்பேக்கில் மட்டுமே பார்க்கிறோமே ? என வருந்தும் ரசிகனுக்கு ஆறுதலாக நயனும் இரு முகியாக வருவது நம்பதாங்க முடியாத திகில் திருப்பம்.
இரண்டாவது நாயகி நித்யா மேனன் ,இக்கட்டான சூழலில் ரித்விகா குண்டடிபட்டு இறந்ததற்காக விவாதம் செய்வது கொடுமை . மற்றபடி , அழகிய "ரா" உளவுப் பிரிவு ஆபிஸராக நயன் இல்லாத இடங்களில் அசத்துகிறார்.
காமெடிநாயகர்: கருணாகரன் ஊக்க மருந்து பற்றி சொல்லும் இடம் படத்திற்கு என்ன தான் முக்கியம் என்றாலும்., அக் காட்சி படத்தின் விறுவிறுப்பை வெகுவாக குறைப்பது பலவீனம்.
பிற நட்சத்திரங்கள்: தம்பி ராமைய்யா , நாசர் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். எனும் அளவில் இருக்கிறார்கள் பாவம்!
தொழில்நுட்பகலைஞர்கள்: ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் 'ஹலோனா ஹலோனா .....', "அய்யோ நெஞ்சிலே .....", "கண்ணை விட்டு ... " உள்ளிட்ட பாடல்களும் அவை கடற்கரை பிரதேசம் மற்றும் காஷ்மீர் பிரதேச பகுதி களில் படமாக் கப்பட்டிருக்கும் விதமும் படத்திற்கு பலம். அன்பறிவ்வின் சண்டைப் பயிற்சியும் ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும்பலம் .
பலம்: இத்திரைப்படம், மலேசியா இந்திய தூதரகத்தில் ஆரம்பமாகிறது .... என்பதையும் பாடல் காட்சிகள் பல்வேறு இயற்கை எழில் கொஞ்சும் உள்நாட்டு , வெளிநாட்டு லொகேஷன்களில் படமாகி இருக்கிறது ...என்னும் பிரமாண்டமும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும் பலம். அதே மாதிரி,மருந்து உபயத்தில் ஐந்து நிமிடம்பறந்து பறந்து அடிக்கும் வில்லன் லவ் விக்ரமையும், அவரது சகாக்களையும் அகிலன் விக்ரம் போட்டுத் தாக்கி ஜெயிப்பது தமிழ் சினிமா வுக்கு புதுசு.இரண்டு விக்ரமின் நடை , உடை , பாவனை எல்லாம் மேலும் பலம்.
பலவீனம்: லாஜிக் இல்லா வில்லன் மற்றும் ஹீரோ விக்ரம் இடேயேயான காட்சிகள் பெரும் பலவீனம்.
இயக்கம்: ஆனந்த் ஷங்கரின் இயக்கத்தில் ஒரு சில லாஜிக் மீறல்கள் , குறைகள் இருந்தாலும் , "உன்னோட தேவைக்காக என்னோட நேரத்தோட விளையாடாத..." உள்ளிட்ட டயலாக்குகள் திரும்பி பார்க்க வைக்கின்றன.
பைனல் 'பன்ச்': ஆக மொத்தத்தில் ., ஆனந்த் ஷங்கரின் எழுத்து , இயக்கத்தில்., அடிக்கடி, "பன்முகனா'க தெரியும் விக்ரமின் 'இருமுகன் 'தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் 'புதுமுகன்!'
Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review