நெற்றிக்கண் விமர்சனம்
நயன்தாரா,அஜ்மல் அமீர்
Samayam Tamil 13 Aug 2021, 6:24 pm
சிபிசிஐடி அதிகாரியான துர்காவுக்கு (நயன்தாரா) ஒரு விபத்தில் பார்வை பறிபோவதுடன் நெற்றிக்கண் படம் துவங்குகிறது. அதே விபத்தில் துர்காவின் சகோதரர்(சச்சின் நாச்சியப்பன்) இறந்துவிடுகிறார். பார்வை இழந்தாலும் தனியாக வாழ கற்றுக்கொள்கிறார் துர்கா.
பெண்களை கடத்தி, கொடுமைப்படுத்தும் சைக்கோவை(அஜ்மல் அமீர்) கண்டுபிடிக்க வேண்டியபோது தான் துர்காவுக்கு பெரிய சோதனை ஏற்படுகிறது.
2011ம் ஆண்டு வெளியான கொரிய படமான பிளைண்டின் ரீமேக் தான் நெற்றிக்கண். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நம்மை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறார்கள். துர்காவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் அழகு. சில இடங்களில் டென்ஷனில் நகத்தை கடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
வில்லன் துர்காவை பின் தொடர்ந்து கடத்த முயன்று சேஸில் முடிவது த்ரில்லாக இருந்தது. ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டார் என்பதால் சில மாஸ் தருணங்களை வைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்த நேரத்தில் மிஷ்கினின் சைக்கோவை பற்றி பேசாமல் இருக்க முடியாது. அந்த படத்திலும் பார்வையில்லாத ஹீரோ சைக்கோ கொலையாளியை தேடுவார். ஆனால் மிஷ்கின் படத்தில் குற்றம், தண்டனை என்று இருக்க, மிலிந்த் ராவோ ஹீரோயின் மற்றும் வில்லன் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தை காட்டியிருக்கிறார். அது ஒன்றும் தவறு இல்லை.
த்ரில்லர் படத்தை அழகாக கையாண்டிருக்கிறார் மிலிந்த் ராவ். படம் கொஞ்சம் இழுக்கிறது. வில்லன் ஏன் அப்படியானார் என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த மருத்துவ பிரச்சனை இருப்பவர்கள் பற்றி தவறான கருத்து பரவ வழிவகுப்பது போன்று இருக்கிறது.
பார்வையற்ற ஹீரோயின் சைக்கோ வில்லனிடம் இருந்து மீண்டும் மீண்டும் தப்பிப்பது பொறுமையை சோதிக்கிறது. ஆனால் படம் முடிந்த விதம் திருப்திரகமாக இருக்கிறது.
பெண்களை கடத்தி, கொடுமைப்படுத்தும் சைக்கோவை(அஜ்மல் அமீர்) கண்டுபிடிக்க வேண்டியபோது தான் துர்காவுக்கு பெரிய சோதனை ஏற்படுகிறது.
2011ம் ஆண்டு வெளியான கொரிய படமான பிளைண்டின் ரீமேக் தான் நெற்றிக்கண். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நம்மை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறார்கள். துர்காவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் அழகு. சில இடங்களில் டென்ஷனில் நகத்தை கடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
வில்லன் துர்காவை பின் தொடர்ந்து கடத்த முயன்று சேஸில் முடிவது த்ரில்லாக இருந்தது. ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டார் என்பதால் சில மாஸ் தருணங்களை வைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்த நேரத்தில் மிஷ்கினின் சைக்கோவை பற்றி பேசாமல் இருக்க முடியாது. அந்த படத்திலும் பார்வையில்லாத ஹீரோ சைக்கோ கொலையாளியை தேடுவார். ஆனால் மிஷ்கின் படத்தில் குற்றம், தண்டனை என்று இருக்க, மிலிந்த் ராவோ ஹீரோயின் மற்றும் வில்லன் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தை காட்டியிருக்கிறார். அது ஒன்றும் தவறு இல்லை.
த்ரில்லர் படத்தை அழகாக கையாண்டிருக்கிறார் மிலிந்த் ராவ். படம் கொஞ்சம் இழுக்கிறது. வில்லன் ஏன் அப்படியானார் என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த மருத்துவ பிரச்சனை இருப்பவர்கள் பற்றி தவறான கருத்து பரவ வழிவகுப்பது போன்று இருக்கிறது.
பார்வையற்ற ஹீரோயின் சைக்கோ வில்லனிடம் இருந்து மீண்டும் மீண்டும் தப்பிப்பது பொறுமையை சோதிக்கிறது. ஆனால் படம் முடிந்த விதம் திருப்திரகமாக இருக்கிறது.
Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review