கொடிவீரன் - திரைவிமர்சனம்
சசிகுமார், பூர்ணா, மஹிமா நம்பியா, பசுபதி, பால சரவணன், சனுஷா, விதார்த்
TOI Contributor | 19 Jan 2018, 12:22 pm
கரு: பேமிலி சென்டிமென்ட் குறிப்பாக தங்கை பாசம் நிரம்பிய ஹீரோவுக்கும், அதே சென்டிமென்ட் நிரம்பிய வில்லனுக்குமிடையில் நடக்கும் சண்டை, சச்சரவுகள் தான் கொடிவீரன் படத்தின் கரு.
கதை: தன் தங்கை மீது உயிரையே வைத்தபடி, அநீதிக்கு எதிராக பொங்கி எழுந்து, நல்லதையே நினைத்து, நல்லதையே செய்யும் நாயகருக்கும், அவரை மாதிரியே ,தன் தங்கை மீதும் தன் தங்கை குடும்பத்தின் மீதும் உயிரையே வைத்தபடி நீதிக்கும், நேர்மைக்கும் எதிராக அநீதிக்கு ஆதரவாக செயல்படும் வில்லனுக்கும் இடையில் ஏற்படும் அதிரடி சரவெடி தான் "கொடிவீரன் ." படத்தின் கதையும், கள மும்.
காட்சிப்படுத்தல்: தனது "கம்பெனி புரொடக்ஷன்ஸ் " பேனரில் சசிகுமாரே தயாரித்து, கதாநாயகராகவும் நடிக்க, "குட்டி புலி " , "கொம்பன்" , "மருது"ஆகிய படங்களை இயக்கிய முத்தையாவின் எழுத்து, இயக்கத்தில் , ஜனரஞ்சகமாக வெளி வந்திருக்கும் படம் "கொடிவீரன் ." படத்தில் நீதிபதியின் மகனே அவர் தீர்ப்பு சொல்ல இருக்கும் கேஸில் வக்கீலாக வாதாடுவதும், அவரை வில்லன் பசுபதி கோர்ட் வாசலிலேயே தீர்த்து கட்டி விட்டு, நீதிபதியின் துக்க வீட்டுக்கே போய் சனிப்பிணம் தனியாக போகாது ....." என்பதும் லாஜிக் மீறலோ மீறலாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது .... எல்லாம் ரொம்பவே இடிக்கிறது. ஆமாம், சனிக்கிழமைகளில் ஏது கோர்ட் .?
கதைநாயகர்: கொடி வீரனாக சசிகுமார், வழக்கம் போலவே வாழ்ந்திருக்கிறார். கதைப்படி , சாமியாடியாகவும், சண்டியராகவும், சம்சாரியாகவும் சசி செம பர்பாமென்ட்ஸ் காட்டியிருக்கிறார் .பாராட்டுக்கள்!
மற்றொரு நாயகர்: இன்னொரு நாயகராக விதார்த்தும் நேர்மையான ஆர்டிஓ சுபாஷ் சந்திர போஸாக தன் பங்கிற்கு மிரட்டியிருக்கிறார்.
கதை நாயகியர்: மலர் கொடியாக மஹீமா நம்பியார், வேல்விழியாக பூர்ணா, பார்வதியாக சனுஷா ஆகிய மூன்று நாயகியரும், நாயகியராகவும் சரி பாசமிகு தங்கைகளாகவும் படத்திற்கு பலம் கூட்டியிருக்கின்றனர்.
காமெடியன்: காமெடியுடன் குணசித்திரமும் கலந்து வழங்கியுள்ளார் பாலசரவணன்.
வில்லன் :வில்லங்கம் வெள்ளைக்காரனாக பசுபதி, அவரது மைத்துனர் அதிகார பாண்டியனாக இந்தர்குமார், இருவரும் வில்லதனத்தில் புகுந்து விளையாடியிருக்கின்றனர்.
பிற நட்சத்திரங்கள்: துரையாக விக்ரம் சுகுமாறன், கல்யாண புரோக்கராக வந்து கலகலப்பூட்டும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், நாயகரின் தாய் மாமன் மாயக்கண்ணன் - சக்தி சரவணன், உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.
தொழில்நுட்பகலைஞர்கள்: வெங்கட்ராஜனின் படத்தொகுப்பில் படத்தின் நீளம் இன்னும் சற்றே குறைக்கப்பட்டிருக்கலாம். கதிரின் ஒளிப்பதிவில் சசிகுமார் படங்களுக்கே உரிய கிராமிய மனம் கமழுகிறது. சபாஷ்! ரகுநந்தனின் இசையில், " அய்யோ அடி ஆத்தே...", " ரக ரகளை டா ..." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் படத்தோட ரசிகனை பிரமாதமாய் ஒன்ற விடுகின்றன .
பலம்: சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர்களின் சண்டை காட்சிகள் மிரட்டல் அதிரடி.என்பது படத்திற்கு பலம். மேலும் , "நம்ம கும்புடுற சாமி அது அது இரண்டு இரண்டு பொண்டாட்டி வச்சிட்டிருக்கு..... நான் வச்சிருந்தா தப்பா ?", ",அநியாயம் நடக்குற இடத்துல கண்ணன் வர்றாரோ இல்லையோ .... எங்க அண்ணன் வருவாரு ....", "சாமி இருக்கிற இடத்துல தான் சப்பரமும் இருக்கும் ஜனங்களும் இருப்பாங்க ... " , "என்ன மாப்பிள்ளை நம்ம இனத்தோட அடையாளமா, இல்ல மாமா உங்க குணத்தோட அடையாளம்...." "நாம நினைச்ச விஷயம் நடக்குதோ இல்லையோ, நினைக்கும் போதாவது நடக்குணும்ல ...." , "இவனுக்கா , இந்த சாங்கு இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதன் இமான் இளைச் சட்டார் போல ... " என்பது போன்ற "பன்ச் "டயலாக்குகள் எல்லாம் படத்திற்கு மேலும் பெரும் பலம்!
பலவீனம்: கொட்டாவி வர வைக்கும் தேவைக்கு அதிகமான கதையின் நீளம்.
இயக்கம்: முத்தைய்யாவின் எழுத்து இயக்கத்தில் அவரது படங்களுக்கே உரிய கிராமிய மணமும், மண்வாசனையும் இப்படத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றன. ஆனால், படத்தில் நீதிபதியின் மகனே அவர் தீர்ப்பு சொல்ல இருக்கும் கேஸில் வக்கீலாக வாதாடுவதும், அவரை வில்லன் பசுபதி கோர்ட் வாசலிலேயே தீர்த்து கட்டி விட்டு நீதிபதியின் துக்க வீட்டுக் கே போய் சனிப் பிணம் தனியாக போகாது ....." என்பதும் லாஜிக் மீறலாக இயக்கப்பட்டிருப்பது பலவீனம்..?
பைனல்" பன்ச் ": மொத்தத்தில், "கொடிவீரன் '- 'வெள்ளித்திரையில் உலா வருவான்!"
கதை: தன் தங்கை மீது உயிரையே வைத்தபடி, அநீதிக்கு எதிராக பொங்கி எழுந்து, நல்லதையே நினைத்து, நல்லதையே செய்யும் நாயகருக்கும், அவரை மாதிரியே ,தன் தங்கை மீதும் தன் தங்கை குடும்பத்தின் மீதும் உயிரையே வைத்தபடி நீதிக்கும், நேர்மைக்கும் எதிராக அநீதிக்கு ஆதரவாக செயல்படும் வில்லனுக்கும் இடையில் ஏற்படும் அதிரடி சரவெடி தான் "கொடிவீரன் ." படத்தின் கதையும், கள மும்.
காட்சிப்படுத்தல்: தனது "கம்பெனி புரொடக்ஷன்ஸ் " பேனரில் சசிகுமாரே தயாரித்து, கதாநாயகராகவும் நடிக்க, "குட்டி புலி " , "கொம்பன்" , "மருது"ஆகிய படங்களை இயக்கிய முத்தையாவின் எழுத்து, இயக்கத்தில் , ஜனரஞ்சகமாக வெளி வந்திருக்கும் படம் "கொடிவீரன் ." படத்தில் நீதிபதியின் மகனே அவர் தீர்ப்பு சொல்ல இருக்கும் கேஸில் வக்கீலாக வாதாடுவதும், அவரை வில்லன் பசுபதி கோர்ட் வாசலிலேயே தீர்த்து கட்டி விட்டு, நீதிபதியின் துக்க வீட்டுக்கே போய் சனிப்பிணம் தனியாக போகாது ....." என்பதும் லாஜிக் மீறலோ மீறலாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது .... எல்லாம் ரொம்பவே இடிக்கிறது. ஆமாம், சனிக்கிழமைகளில் ஏது கோர்ட் .?
கதைநாயகர்: கொடி வீரனாக சசிகுமார், வழக்கம் போலவே வாழ்ந்திருக்கிறார். கதைப்படி , சாமியாடியாகவும், சண்டியராகவும், சம்சாரியாகவும் சசி செம பர்பாமென்ட்ஸ் காட்டியிருக்கிறார் .பாராட்டுக்கள்!
மற்றொரு நாயகர்: இன்னொரு நாயகராக விதார்த்தும் நேர்மையான ஆர்டிஓ சுபாஷ் சந்திர போஸாக தன் பங்கிற்கு மிரட்டியிருக்கிறார்.
கதை நாயகியர்: மலர் கொடியாக மஹீமா நம்பியார், வேல்விழியாக பூர்ணா, பார்வதியாக சனுஷா ஆகிய மூன்று நாயகியரும், நாயகியராகவும் சரி பாசமிகு தங்கைகளாகவும் படத்திற்கு பலம் கூட்டியிருக்கின்றனர்.
காமெடியன்: காமெடியுடன் குணசித்திரமும் கலந்து வழங்கியுள்ளார் பாலசரவணன்.
வில்லன் :வில்லங்கம் வெள்ளைக்காரனாக பசுபதி, அவரது மைத்துனர் அதிகார பாண்டியனாக இந்தர்குமார், இருவரும் வில்லதனத்தில் புகுந்து விளையாடியிருக்கின்றனர்.
பிற நட்சத்திரங்கள்: துரையாக விக்ரம் சுகுமாறன், கல்யாண புரோக்கராக வந்து கலகலப்பூட்டும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், நாயகரின் தாய் மாமன் மாயக்கண்ணன் - சக்தி சரவணன், உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.
தொழில்நுட்பகலைஞர்கள்: வெங்கட்ராஜனின் படத்தொகுப்பில் படத்தின் நீளம் இன்னும் சற்றே குறைக்கப்பட்டிருக்கலாம். கதிரின் ஒளிப்பதிவில் சசிகுமார் படங்களுக்கே உரிய கிராமிய மனம் கமழுகிறது. சபாஷ்! ரகுநந்தனின் இசையில், " அய்யோ அடி ஆத்தே...", " ரக ரகளை டா ..." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் படத்தோட ரசிகனை பிரமாதமாய் ஒன்ற விடுகின்றன .
பலம்: சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர்களின் சண்டை காட்சிகள் மிரட்டல் அதிரடி.என்பது படத்திற்கு பலம். மேலும் , "நம்ம கும்புடுற சாமி அது அது இரண்டு இரண்டு பொண்டாட்டி வச்சிட்டிருக்கு..... நான் வச்சிருந்தா தப்பா ?", ",அநியாயம் நடக்குற இடத்துல கண்ணன் வர்றாரோ இல்லையோ .... எங்க அண்ணன் வருவாரு ....", "சாமி இருக்கிற இடத்துல தான் சப்பரமும் இருக்கும் ஜனங்களும் இருப்பாங்க ... " , "என்ன மாப்பிள்ளை நம்ம இனத்தோட அடையாளமா, இல்ல மாமா உங்க குணத்தோட அடையாளம்...." "நாம நினைச்ச விஷயம் நடக்குதோ இல்லையோ, நினைக்கும் போதாவது நடக்குணும்ல ...." , "இவனுக்கா , இந்த சாங்கு இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதன் இமான் இளைச் சட்டார் போல ... " என்பது போன்ற "பன்ச் "டயலாக்குகள் எல்லாம் படத்திற்கு மேலும் பெரும் பலம்!
பலவீனம்: கொட்டாவி வர வைக்கும் தேவைக்கு அதிகமான கதையின் நீளம்.
இயக்கம்: முத்தைய்யாவின் எழுத்து இயக்கத்தில் அவரது படங்களுக்கே உரிய கிராமிய மணமும், மண்வாசனையும் இப்படத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றன. ஆனால், படத்தில் நீதிபதியின் மகனே அவர் தீர்ப்பு சொல்ல இருக்கும் கேஸில் வக்கீலாக வாதாடுவதும், அவரை வில்லன் பசுபதி கோர்ட் வாசலிலேயே தீர்த்து கட்டி விட்டு நீதிபதியின் துக்க வீட்டுக் கே போய் சனிப் பிணம் தனியாக போகாது ....." என்பதும் லாஜிக் மீறலாக இயக்கப்பட்டிருப்பது பலவீனம்..?
பைனல்" பன்ச் ": மொத்தத்தில், "கொடிவீரன் '- 'வெள்ளித்திரையில் உலா வருவான்!"
Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review