சாயா - திரைவிமர்சனம்
சந்தோஷ் கன்னா, சோனியா அகர்வால், காயத்ரி , ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன், ராஜன் , பாலாசிங்,கராத்தே ராஜா, மூகாம்பிகை ரவி ...
TNN | 21 Jan 2018, 12:25 am
கரு : நல்ல மனிதரின் இலவச பள்ளிக்கும் காசு பறிக்கும் கெட்ட மனிதர்களின் தனியார் பள்ளிக்கும் இடையில் நடக்கும் முட்டல் , மோதலில் அபூர்வ சக்தியுடைய ஹீரோ யார் பக்கம் ? என்பதே" சாயா" படக்கரு .
கதை : கொல்லிமலை பக்கமுள்ள வளையபட்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இலவசமாக பள்ளி நடத்தி வருகிறார் ராஜன். இந்த ஊருக்கு, வெளியூரில் படித்து முடித்துவிட்டு வரும் நாயகன் சந்தோஷ் கண்ணா, ராஜனுக்குஉறுதுணையாக இருந்து வருகிறார்.
இதே ஊரில் பண்ணையாரான பாலாசிங், தனது தம்பி கராத்தே ராஜா, மூகாம்பிகைரவி ஆகியோர் உதவியுடன் தனியார் பள்ளிக்கூடம் நடத்தி, கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். ராஜன் இலவசமாக கல்வி வழங்குவதால், இவர்களது பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் சேர்க்கை குறைகிறது. இதனால், ராஜனை எப்படியாவது அந்த பள்ளிக்கூடத்தை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்... சகோதரர்கள் .
சந்தோஷின் மாமன் மகளான நாயகி காயத்ரி, தனது மாமனை திருமணம்செய்துகொள்ள ஆசையுடன்இருக்கிறார் . இந்நிலையில், இரவானதும் நாயகனுக்கு மட்டும் அவனது பெயரை ஒரு பெண் அழைப்பது போன்று குரல் கேட்கிறது. அதேநேரத்தில் கொல்லிமலையில் வசிக்கும் ஒரு சாமியார் தன் வாழ்நாள்முடியும் தருவாயில் தன்னிடம் உள்ளசக்திகளையெல்லாம் நாயகனுக்குகொடுத்து விட்டு மறைகிறார்.
அந்த சக்திகளை வைத்துக் கொண்டுநாயகன் ஊரில் இறந்துபோனவர்களை எல்லாம்உயிர்ப்பிக்கிறார். இந்நிலையில், ஆசிரியர் ராஜனை, பாலாசிங்கின் தம்பிகள்கொலை செய்கிறார்கள். அவரையும் உயிர்பிக்க முயற்சிக்கும் வேளையில், ராஜனின் ஆவி, தன்னை உயிர்பிக்கவேண்டாம் என்றும், தனக்கு பதிலாக அந்த பள்ளிக்கூடத்தை சிறப்பாகசெயல்படுத்துமாறும் நாயகனிடம் கேட்டுக் கொண்டு மறைந்துவிடுகிறது.
அதன் பின் , நாயகன் அந்த இலவச பள்ளிக்கூடத்தை தன் பொறுப்பில் ஏற்று சிறப்பாகநடத்தினாரா? ஆசிரியர் ராஜனை கொன்றவர்களை பழிதீர்த்தாரா?காதலியை கரம் பிடித்தாரா ? இதில் நடிகை சோனியா அகர்வாலின் பங்கு என்ன ...? என்பதற்கெல்லாம் சரியாக விடை சொல்கிறது "சாயா"படத்தின் மீதிக்கதையும் , களமும் .
காட்சிப்படுத்தல் : புதியவர்கள் பார்த்திபன் எஸ்.ஸின் ஓளிப்பதிவில் ,ஜான் பீட்டர் ஏ சி யின் இசையில் ., பழனிவேல் வி எஸ்ஸின் இயக்கத்தில் புதுமுகங்கள் சந்தோஷ் கன்னா - காயத்ரி ஜோடியுடன் நடிகை சோனியா அகர்வாலும் தோன்றி நடித்திருக்கும் "சாயா" படத்தில்.,சொல்ல வேண்டிய கருத்தை அழுத்தமாக , ஆழமாக சொல்லாமல் தேவையில்லாத காட்சிகளையெல்லாம் காட்சிப்படுத்தி தெளிந்த நீரோடையாக இருந்திருக்க வேண்டிய கதையை கமர்ஷியல் என்ற பெயரில் சாக்கடையாக குழப்பி விட்டு ., படத்தில் இடம்பெற்றிருக்கும் நல்ல விஷயங்களில் .,எந்தவொரு விஷயமும் ரசிகனுக்கு தெளிவாக புரியாதபடி செய்துள்ளது பெரும் குறை!
கதாநாயகர்: புதுமுகம் சந்தோஷ் கண்ணாவுக்கு நாயகனுக்குண்டான தோற்றம் இருந்தாலும்., அவரால் சிறப்பாக தன் பாத்திரத்தை ஏற்று நடிக்க முடியவில்லை.. என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. மனிதர் ரசிகனை வசீகரிக்க வேண்டிய சென்டிமெண்ட் காட்சிகளில் கூட ஏனோதானோவென்று நடிப்பைவெளிப்படுத்தி கடுப்பேத்தியிருக்கிறார். அதேபோல், காமெடி, ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் இவரது நடிப்பு படு சொதப்பல் இவரை குறை சொல்வதைவிட இவரிடம் இயக்குனர்சரியாக வேலை வாங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கதாநாயகியர் : முதல் நாயகியாக , போலீஸ் அதிகாரியாகவரும் சோனியா அகர்வால் கடைசி சண்டை காட்சியில் மட்டும் தலையைகாண்பித்துவிட்டு சென்றிருக்கிறார். மற்றபடி அவருக்கு "சாயா "பட பேப்பர் விளம்பரங்களில் இட்டு கட்டி காட்டுவது மாதிரியானகதாபாத்திரம் எதிலும் இதில் நடிக்கவில்லை ... என்பது கொடுமை .
படம் முழுக்க வரும் கதாநாயகியான காயத்ரி., ஏற்கனவே ஒரு சில படங்களில் ,பார்த்த முகம் தான் என்றாலும், இந்த படத்தில் மேலும் சிறப்பாக நடித்திருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட வீர வசனங்களை அச்சரம் பிசகாமல் பேசுவதிலாகட்டும், தனது நாயக மாமனுடன் ரொமான்ஸ் செய்வதிலாகட்டும் அனைத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
வில்லன்கள் :அந்த ஊர் பண்ணையாராக வரும் பாலாசிங்,அவரது தம்பிகளாக வரும் கராத்தே ஜா, மூகாம்பிகை ரவி ஆகிய மூவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.
காமெடியன்ஸ் : நெல்லை சிவா, கொட்டாச்சி, கிரேன் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. அதேமாதிரி ,நாயகர் கூடவேவரும் பாவா லட்சுமணனுக்கு காமெடி செய்வதற்கோ , நடிப்பதற்கோ பெரிதாக வாய்ப்பு வழங்கப் படவில்லை என்றேதோன்றுகிறது.
பிற நட்சத்திரங்கள் : ஆசிரியராக வரும் ராஜனுக்கு கௌரவமான வேடம். அந்த வேடத்தை தனது வழக்கமான சிறப்பானநடிப்பால் பூர்த்தி செய்திருக்கிறார்... படு கச்சிதமாக! மேலும் , பஞ்சாயத்துதலைவர்களாக வரும் ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக தந்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பகலைஞர்கள் : ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.அதிலும் அம்மன்பாடலும், ஆரம்பத்தில் வரும் கிராமிய கும்மி பாடலும் ரசிக்க வைக்கிறது. அதே நேரம் பழனிவேலின் பின்னணி இசை சுமார் ரகமே. மேலும் பார்த்திபனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.
பலம் : நடிகை சோனியா அகர்வால் இப்படத்தில் நடித்திருப்பது பலம் .
பலவீனம் : அதே , சோனியா அகர்வால் படத்தில் சரியாக பயன்படுத்தப்படாதது பெரும் பலவீனம்.
இயக்கம் : பழனிவேல் வி எஸ்.ஸின் எழுத்து , இயக்கத்தில் .. தனியார் பள்ளிக்கூடங்கள் தங்கள் பள்ளிக்கூடத்தின் தரத்திற்காக 9-ம் வகுப்பிலேயே 10- வகுப்புக்கான பாடத்தையும், 11-ஆம் வகுப்பிலேயே 12-ஆம் வகுப்புக்கான பாடத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களின் மீது படிப்பு சுமையை அதிகம் சுமத்தி அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறார்கள். அவர்களை புரிந்து படிக்க வைத்தாலே இந்த மாதிரியானசுமைகளை அவர்கள் மீது ஏற்ற வேண்டியதில்லை....என்பதை வலியுறுத்தும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்.
ஆனால், சொல்ல வேண்டிய கருத்தைஆழமாக சொல்லாமல் தேவையில்லாத காட்சிகளையெல்லாம் தெளிந்த நீரோடையாக இருந்திருக்க வேண்டிய கதையின் இடையிடையே கொண்டு வைத்து படத்தில் இடம்பெற்றிருக்கும் நல்ல விஷயங்களில் .,எந்தவொரு விஷயமும் ரசிகனுக்கு தெளிவாக புரியாதபடி செய்துவிட்டார்.
அதேபோல், படத்தில் இடம்பெறும் ஆவிகள் மனிதர்களை போல சாதாரணமாக நடமாடுவது.,இறந்தவர்களை உயிர் பிழைத்து வரவைப்பது என நம்ப முடியாத 'ஹம்பக்' விஷயங்களும் படத்தை சோர்வில்லாமல் , போரடிக்காமல் பார்ப்பதற்கு தடையாக இருக்கிறது. அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வேலை வாங்குவதிலும் ரொம்பவும் கவனம் சிதறியிருக்கிறார்.... இயக்குனர் என்பது பலவீனம் .
பைனல் "பன்ச் " : ஆக மொத்தத்தில், ‘'சாயா’ சரிதான் 'போய்யா ... ' என்ற ரீதியில் இருக்கிறது!"
கதை : கொல்லிமலை பக்கமுள்ள வளையபட்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இலவசமாக பள்ளி நடத்தி வருகிறார் ராஜன். இந்த ஊருக்கு, வெளியூரில் படித்து முடித்துவிட்டு வரும் நாயகன் சந்தோஷ் கண்ணா, ராஜனுக்குஉறுதுணையாக இருந்து வருகிறார்.
இதே ஊரில் பண்ணையாரான பாலாசிங், தனது தம்பி கராத்தே ராஜா, மூகாம்பிகைரவி ஆகியோர் உதவியுடன் தனியார் பள்ளிக்கூடம் நடத்தி, கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். ராஜன் இலவசமாக கல்வி வழங்குவதால், இவர்களது பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் சேர்க்கை குறைகிறது. இதனால், ராஜனை எப்படியாவது அந்த பள்ளிக்கூடத்தை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்... சகோதரர்கள் .
சந்தோஷின் மாமன் மகளான நாயகி காயத்ரி, தனது மாமனை திருமணம்செய்துகொள்ள ஆசையுடன்இருக்கிறார் . இந்நிலையில், இரவானதும் நாயகனுக்கு மட்டும் அவனது பெயரை ஒரு பெண் அழைப்பது போன்று குரல் கேட்கிறது. அதேநேரத்தில் கொல்லிமலையில் வசிக்கும் ஒரு சாமியார் தன் வாழ்நாள்முடியும் தருவாயில் தன்னிடம் உள்ளசக்திகளையெல்லாம் நாயகனுக்குகொடுத்து விட்டு மறைகிறார்.
அந்த சக்திகளை வைத்துக் கொண்டுநாயகன் ஊரில் இறந்துபோனவர்களை எல்லாம்உயிர்ப்பிக்கிறார். இந்நிலையில், ஆசிரியர் ராஜனை, பாலாசிங்கின் தம்பிகள்கொலை செய்கிறார்கள். அவரையும் உயிர்பிக்க முயற்சிக்கும் வேளையில், ராஜனின் ஆவி, தன்னை உயிர்பிக்கவேண்டாம் என்றும், தனக்கு பதிலாக அந்த பள்ளிக்கூடத்தை சிறப்பாகசெயல்படுத்துமாறும் நாயகனிடம் கேட்டுக் கொண்டு மறைந்துவிடுகிறது.
அதன் பின் , நாயகன் அந்த இலவச பள்ளிக்கூடத்தை தன் பொறுப்பில் ஏற்று சிறப்பாகநடத்தினாரா? ஆசிரியர் ராஜனை கொன்றவர்களை பழிதீர்த்தாரா?காதலியை கரம் பிடித்தாரா ? இதில் நடிகை சோனியா அகர்வாலின் பங்கு என்ன ...? என்பதற்கெல்லாம் சரியாக விடை சொல்கிறது "சாயா"படத்தின் மீதிக்கதையும் , களமும் .
காட்சிப்படுத்தல் : புதியவர்கள் பார்த்திபன் எஸ்.ஸின் ஓளிப்பதிவில் ,ஜான் பீட்டர் ஏ சி யின் இசையில் ., பழனிவேல் வி எஸ்ஸின் இயக்கத்தில் புதுமுகங்கள் சந்தோஷ் கன்னா - காயத்ரி ஜோடியுடன் நடிகை சோனியா அகர்வாலும் தோன்றி நடித்திருக்கும் "சாயா" படத்தில்.,சொல்ல வேண்டிய கருத்தை அழுத்தமாக , ஆழமாக சொல்லாமல் தேவையில்லாத காட்சிகளையெல்லாம் காட்சிப்படுத்தி தெளிந்த நீரோடையாக இருந்திருக்க வேண்டிய கதையை கமர்ஷியல் என்ற பெயரில் சாக்கடையாக குழப்பி விட்டு ., படத்தில் இடம்பெற்றிருக்கும் நல்ல விஷயங்களில் .,எந்தவொரு விஷயமும் ரசிகனுக்கு தெளிவாக புரியாதபடி செய்துள்ளது பெரும் குறை!
கதாநாயகர்: புதுமுகம் சந்தோஷ் கண்ணாவுக்கு நாயகனுக்குண்டான தோற்றம் இருந்தாலும்., அவரால் சிறப்பாக தன் பாத்திரத்தை ஏற்று நடிக்க முடியவில்லை.. என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. மனிதர் ரசிகனை வசீகரிக்க வேண்டிய சென்டிமெண்ட் காட்சிகளில் கூட ஏனோதானோவென்று நடிப்பைவெளிப்படுத்தி கடுப்பேத்தியிருக்கிறார். அதேபோல், காமெடி, ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் இவரது நடிப்பு படு சொதப்பல் இவரை குறை சொல்வதைவிட இவரிடம் இயக்குனர்சரியாக வேலை வாங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கதாநாயகியர் : முதல் நாயகியாக , போலீஸ் அதிகாரியாகவரும் சோனியா அகர்வால் கடைசி சண்டை காட்சியில் மட்டும் தலையைகாண்பித்துவிட்டு சென்றிருக்கிறார். மற்றபடி அவருக்கு "சாயா "பட பேப்பர் விளம்பரங்களில் இட்டு கட்டி காட்டுவது மாதிரியானகதாபாத்திரம் எதிலும் இதில் நடிக்கவில்லை ... என்பது கொடுமை .
படம் முழுக்க வரும் கதாநாயகியான காயத்ரி., ஏற்கனவே ஒரு சில படங்களில் ,பார்த்த முகம் தான் என்றாலும், இந்த படத்தில் மேலும் சிறப்பாக நடித்திருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட வீர வசனங்களை அச்சரம் பிசகாமல் பேசுவதிலாகட்டும், தனது நாயக மாமனுடன் ரொமான்ஸ் செய்வதிலாகட்டும் அனைத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
வில்லன்கள் :அந்த ஊர் பண்ணையாராக வரும் பாலாசிங்,அவரது தம்பிகளாக வரும் கராத்தே ஜா, மூகாம்பிகை ரவி ஆகிய மூவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.
காமெடியன்ஸ் : நெல்லை சிவா, கொட்டாச்சி, கிரேன் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. அதேமாதிரி ,நாயகர் கூடவேவரும் பாவா லட்சுமணனுக்கு காமெடி செய்வதற்கோ , நடிப்பதற்கோ பெரிதாக வாய்ப்பு வழங்கப் படவில்லை என்றேதோன்றுகிறது.
பிற நட்சத்திரங்கள் : ஆசிரியராக வரும் ராஜனுக்கு கௌரவமான வேடம். அந்த வேடத்தை தனது வழக்கமான சிறப்பானநடிப்பால் பூர்த்தி செய்திருக்கிறார்... படு கச்சிதமாக! மேலும் , பஞ்சாயத்துதலைவர்களாக வரும் ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக தந்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பகலைஞர்கள் : ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.அதிலும் அம்மன்பாடலும், ஆரம்பத்தில் வரும் கிராமிய கும்மி பாடலும் ரசிக்க வைக்கிறது. அதே நேரம் பழனிவேலின் பின்னணி இசை சுமார் ரகமே. மேலும் பார்த்திபனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.
பலம் : நடிகை சோனியா அகர்வால் இப்படத்தில் நடித்திருப்பது பலம் .
பலவீனம் : அதே , சோனியா அகர்வால் படத்தில் சரியாக பயன்படுத்தப்படாதது பெரும் பலவீனம்.
இயக்கம் : பழனிவேல் வி எஸ்.ஸின் எழுத்து , இயக்கத்தில் .. தனியார் பள்ளிக்கூடங்கள் தங்கள் பள்ளிக்கூடத்தின் தரத்திற்காக 9-ம் வகுப்பிலேயே 10- வகுப்புக்கான பாடத்தையும், 11-ஆம் வகுப்பிலேயே 12-ஆம் வகுப்புக்கான பாடத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களின் மீது படிப்பு சுமையை அதிகம் சுமத்தி அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறார்கள். அவர்களை புரிந்து படிக்க வைத்தாலே இந்த மாதிரியானசுமைகளை அவர்கள் மீது ஏற்ற வேண்டியதில்லை....என்பதை வலியுறுத்தும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்.
ஆனால், சொல்ல வேண்டிய கருத்தைஆழமாக சொல்லாமல் தேவையில்லாத காட்சிகளையெல்லாம் தெளிந்த நீரோடையாக இருந்திருக்க வேண்டிய கதையின் இடையிடையே கொண்டு வைத்து படத்தில் இடம்பெற்றிருக்கும் நல்ல விஷயங்களில் .,எந்தவொரு விஷயமும் ரசிகனுக்கு தெளிவாக புரியாதபடி செய்துவிட்டார்.
அதேபோல், படத்தில் இடம்பெறும் ஆவிகள் மனிதர்களை போல சாதாரணமாக நடமாடுவது.,இறந்தவர்களை உயிர் பிழைத்து வரவைப்பது என நம்ப முடியாத 'ஹம்பக்' விஷயங்களும் படத்தை சோர்வில்லாமல் , போரடிக்காமல் பார்ப்பதற்கு தடையாக இருக்கிறது. அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வேலை வாங்குவதிலும் ரொம்பவும் கவனம் சிதறியிருக்கிறார்.... இயக்குனர் என்பது பலவீனம் .
பைனல் "பன்ச் " : ஆக மொத்தத்தில், ‘'சாயா’ சரிதான் 'போய்யா ... ' என்ற ரீதியில் இருக்கிறது!"
Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review