தகடு - திரை விமர்சனம்
அஜெய், ஹசிகா, சனம் ஷெட்டி , ராஜ்கபூர் ..
Samayam Tamil | 19 Sep 2016, 9:35 pm
கரு : மன்னர் காலத்தில் தொலைந்து போன செப்புத்தகட்டை தேடி களம் இறங்கும் இன்றைய இளசுகளைப் பற்றிய கரு.
கதை : அந்த கால அரசராட்சி காலத்தில் வறட்சியின் காரணமாக பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும்ஒரு குறுநில மன்னரின் கையில் ஒரு தகடு இருக்கிறது. அந்த தகட்டில் பொன், வைடூரியங்கள் நிறைந்த ஒருபுதையல் இருக்கும் இடத்திற்கான வழி இருக்கிறது. அந்த புதையலை தேடிக் கண்டுபிடித்து நாட்டில்நிலவும் பஞ்சத்தை போக்கநினைக்கிறார் மன்னர் . அப்போது, நயவஞ்சகரான மந்திரி ராஜ்கபூர், அந்த தகட்டை கைப்பற்ற நினைக்கிறார்.
இதற்காக நாட்டின் மன்னன், இளவரசி ஆகியோரை கொல்லும் மந்திரி, அந்த தகட்டை தேடும்போது அது தளபதியின் கையில் கிடைக்கிறது. அவரிடம் சண்டையிட்டு தகட்டைகைப்பற்ற முயற்சிக்கும்போது, தளபதியும், மந்திரியும் இறந்துபோகிறார்கள். இதனால்,தகடு யார் கைக்கும்கிடைக்காமல் அங்கேயே புதைந்து போகிறது.
பல நூற்றாண்டுகள் கழித்து இந்த கதை அப்படியே கல்லூரியில் பாடமாக சொல்லப்படுகிறது. இதை அறியும் நாயகன் அஜய், நாயகி ஹசிகாதத் மற்றும் அவரது நண்பர்கள் நாலு பேர் சேர்ந்து, தகடு அன்று மன்னராட்சி காலத்தில் தொலைந்ததாக கூறப்படும் காட்டுப்பகுதிக்கு சென்று அந்த தகட்டை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகின்றனர். அங்கு போனபிறகு இவர்களுக்கு ஒருபெரிய பிரச்சினை ஏற்படுகிறது.
அந்த பிரச்சினையை சமாளித்துஅந்த தகட்டை இவர்கள்கண்டு பிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் இப் படத்தின் கதை ,மீதிக்கதை.... எல்லாம்.
காட்சிப்படுத்தல் : இயக்குனர் தங்கதுரை எம்., கார்த்திகேயன்.எஸ்ஸின் இசையில், சார்லஸ் மெல்வினின் ஒளிப்பதிவில் காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சற்றே சோர்வை தருகிறது.
கதாநாயகர் : அஜய், புதுமுகம் என்பதாலோ ... என்னவோ ., கொஞ்சமும் நடிக்காமல் சும்மா வந்து போகிறார்.
கதா நாயகி: அறிமுகம் ஹசிகா தத்தும் அப்படியே !
பிற நட்சத்திரங்கள் : படத்தில்முக்கால் வாசி நடிகர்கள்புதுமுகம் என்பதால் படத்தில் உள்ளவர்களிடம் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், தங்களது திறமைக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மன்னராட்சி காலத்தில் நடக்கும் கதையில் மட்டுமே அனுபவம் வாய்ந்த நடிகரான ராஜ்கபூர், பல படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி ஆகியோர் தெரிந்த முகங்கள்.
ராஜ்கபூர் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். சனம் ஷெட்டியும் தனது பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொழில்நுட்பகலைஞர்கள் : சார்லஸ் மெல்வினின் பின்னணி இசை பரவாயில்லை. மன்னராட்சி காலத்திற்கும், நவீன காலத்திற்கும் மாற்று ஒளியமைப்பு வைத்து தனது பணியை புதிய பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திகேயன்.
பலம் : தகடு எனும் டைட்டிலும் மன்னர் காலத்தில் கொஞ்ச நேரமே வரும் காட்சிகளும் .
பலவீனம் : ஒருமணி நேரத்திற்குள் சொல்லிவிடக்கூடிய கதையை, கூடுதல் நீளத்திற்காக தேவையில்லாத காட்சிகளாக அமைத்திருப்பது படத்திற்கு பெரும் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது.... என்பது பலவீனம்.
இயக்கம் : மன்னர் காலத்து சம்பவத்தை நவீன காலத்தோடு இணைத்து படமாக
கொடுத்திருக்கிறார் இயக்குனர் தங்கதுரை... என்பது ஆறுதல்
பைனல்" பன்ச் " : ஆகமொத்தத்தில்., அதறப்பழசாகத் தெரியும் ‘தகடு’ தியேட்டரை விட்டு வுடு ஜுட்டு...... எனும் அளவிலேயே இருக்கிறது. பாவம்!
கதை : அந்த கால அரசராட்சி காலத்தில் வறட்சியின் காரணமாக பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும்ஒரு குறுநில மன்னரின் கையில் ஒரு தகடு இருக்கிறது. அந்த தகட்டில் பொன், வைடூரியங்கள் நிறைந்த ஒருபுதையல் இருக்கும் இடத்திற்கான வழி இருக்கிறது. அந்த புதையலை தேடிக் கண்டுபிடித்து நாட்டில்நிலவும் பஞ்சத்தை போக்கநினைக்கிறார் மன்னர் . அப்போது, நயவஞ்சகரான மந்திரி ராஜ்கபூர், அந்த தகட்டை கைப்பற்ற நினைக்கிறார்.
இதற்காக நாட்டின் மன்னன், இளவரசி ஆகியோரை கொல்லும் மந்திரி, அந்த தகட்டை தேடும்போது அது தளபதியின் கையில் கிடைக்கிறது. அவரிடம் சண்டையிட்டு தகட்டைகைப்பற்ற முயற்சிக்கும்போது, தளபதியும், மந்திரியும் இறந்துபோகிறார்கள். இதனால்,தகடு யார் கைக்கும்கிடைக்காமல் அங்கேயே புதைந்து போகிறது.
பல நூற்றாண்டுகள் கழித்து இந்த கதை அப்படியே கல்லூரியில் பாடமாக சொல்லப்படுகிறது. இதை அறியும் நாயகன் அஜய், நாயகி ஹசிகாதத் மற்றும் அவரது நண்பர்கள் நாலு பேர் சேர்ந்து, தகடு அன்று மன்னராட்சி காலத்தில் தொலைந்ததாக கூறப்படும் காட்டுப்பகுதிக்கு சென்று அந்த தகட்டை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகின்றனர். அங்கு போனபிறகு இவர்களுக்கு ஒருபெரிய பிரச்சினை ஏற்படுகிறது.
அந்த பிரச்சினையை சமாளித்துஅந்த தகட்டை இவர்கள்கண்டு பிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் இப் படத்தின் கதை ,மீதிக்கதை.... எல்லாம்.
காட்சிப்படுத்தல் : இயக்குனர் தங்கதுரை எம்., கார்த்திகேயன்.எஸ்ஸின் இசையில், சார்லஸ் மெல்வினின் ஒளிப்பதிவில் காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சற்றே சோர்வை தருகிறது.
கதாநாயகர் : அஜய், புதுமுகம் என்பதாலோ ... என்னவோ ., கொஞ்சமும் நடிக்காமல் சும்மா வந்து போகிறார்.
கதா நாயகி: அறிமுகம் ஹசிகா தத்தும் அப்படியே !
பிற நட்சத்திரங்கள் : படத்தில்முக்கால் வாசி நடிகர்கள்புதுமுகம் என்பதால் படத்தில் உள்ளவர்களிடம் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், தங்களது திறமைக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மன்னராட்சி காலத்தில் நடக்கும் கதையில் மட்டுமே அனுபவம் வாய்ந்த நடிகரான ராஜ்கபூர், பல படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி ஆகியோர் தெரிந்த முகங்கள்.
ராஜ்கபூர் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். சனம் ஷெட்டியும் தனது பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொழில்நுட்பகலைஞர்கள் : சார்லஸ் மெல்வினின் பின்னணி இசை பரவாயில்லை. மன்னராட்சி காலத்திற்கும், நவீன காலத்திற்கும் மாற்று ஒளியமைப்பு வைத்து தனது பணியை புதிய பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திகேயன்.
பலம் : தகடு எனும் டைட்டிலும் மன்னர் காலத்தில் கொஞ்ச நேரமே வரும் காட்சிகளும் .
பலவீனம் : ஒருமணி நேரத்திற்குள் சொல்லிவிடக்கூடிய கதையை, கூடுதல் நீளத்திற்காக தேவையில்லாத காட்சிகளாக அமைத்திருப்பது படத்திற்கு பெரும் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது.... என்பது பலவீனம்.
இயக்கம் : மன்னர் காலத்து சம்பவத்தை நவீன காலத்தோடு இணைத்து படமாக
கொடுத்திருக்கிறார் இயக்குனர் தங்கதுரை... என்பது ஆறுதல்
பைனல்" பன்ச் " : ஆகமொத்தத்தில்., அதறப்பழசாகத் தெரியும் ‘தகடு’ தியேட்டரை விட்டு வுடு ஜுட்டு...... எனும் அளவிலேயே இருக்கிறது. பாவம்!
Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review