வஞ்சகர் உலகம்
குருசோம கந்தரம்,சிபி புவன சந்திரன்,விசாகன் சூலூர் வணங்காமுடி,சாந்தினி தமிழரசன்,அனிஷாஆம்ப்ரூஸ்,ஜான்விஜய்,அழகம் பெருமாள்,வாசுவிக்ரம்,"பிச்சைக்காரன்" மூர்த்தி
Samayam Tamil | 8 Sep 2018, 12:49 pm
கரு :கல்லூரி காலத்தில் ., நண்பனுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதால் சமூகத்தால் அவமானப்படுத்தப்படும் இளைஞன் .,அதற்கு பழிக்கு பழியாக இந்த சமூகத்தை எப்படி பார்க்கிறான் ? படுத்துகிறான் ..? என்பது தான் இப்படக்கரு.
கதை : சுணவன் மனைவியான சாந்தினி தமிழரசன் - ஜெயப்பிரகாஷ் இடையே ஒரு விதமான மனஸ்தாபம்.. இவர்களது வீட்டிற்கு எதிர் வாடையில் இருக்கும் இவர்களது இன்னொரு வீட்டில் , வாடகைக்கு வசித்து வருகிறார் சிபி புவனசந்திரன். எப்போதும் குடி போதையிலேயே இருக்கும் சிபி .,பத்திரிகை அலுவலகம் ஒன்றில் டெக்னிக்கல் பிரிவில் வேலை பார்க்கிறார்.
இந்நிலையில் ஒருநாள், குடி போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் சிபியை போலீசார் தேடி வந்து தட்டி எழுப்புகின்றனர். வீட்டு உரிமையாளர் சாந்தினி கொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும், அந்த கொலையில், சிபி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரை விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். இதையடுத்த சிபி பணிபுரியும் பத்திரிகை நிறுவனத்தின் .நிருபர் மற்றும் உரிமையாளரின் உதவியுடன் சிபிவெளியே வருகிறார்.
இதையடுத்து இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்குகின்றனர். மற்றொரு பக்கம் ,அந்த கொலைக்கும் ,பெரிய போதை மருந்து கடத்தல் தாதாவுக்கும் தொடர்பு இருப்பதாக கருதுகின்ற சிபி வேலை செய்யும் பத்திரிகை நிறுவனமும் அது குறித்து துப்பு துலக்க ஆரம்பிக்கிறது.
பொறுப்பில்லாத போலீசாரின் விசாரணையில் ஒரு தரப்பின் மீதும், பத்திரிகையாளர் விசாரணையில் வேறொரு தரப்பின் மீதும் ஆழ்ந்த சந்தேகம் ஏற்படுகிறது.
கடைசியில் அந்த கொலையை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே "வஞ்சகர் உலகம்." படத்தின் கதையும் களமும் ஆகும்.
காட்சிப்படுத்தல் : "ஜோக்கர் "நாயகர் குருசோம கந்தரத்துடன்., சிபி புவன சந்திரன், விசாகன் சூலூர் வணங்காமுடி,
சாந்தினி தமிழரசன் , அனிஷாஆம்ப்ரூஸ், ஹரிஷ் பெரேடி , ஜெயப்பிரகாஷ்,ஜான்விஜய், அழகம்பெருமாள், வாசு விக்ரம், "பிச்சைக்காரன்" மூர்த்தி , ரவீந்தர், ப்ரவின் ராஜா , ப்ரித்திகிச்சப்பன் உள்ளிட்டோர் நடிக்க ., ஆண்டனியின் படத்தொகுப்பில் ரோட்ரிகோ டெல்ரியோ ஹெரெரா ஓளிப்பதிவில், சாம்.சி.எஸ் இசையில், மனோஜ் பீதா இயக்கத்தில்
தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய கதை மற்றும் சதை (!) யம்சத்துடன் வெளிவந்திருக்கும் "வஞ்சகர் உலகம்." படந்தில் பெரும்பாலான காட்சிகள் ரொம்பவும் நீள நீளமான காட்சிப்படுத்தல்களாக இருப்பது ரசிகனுக்கு சேர்வை தருகின்றன எல்லாம்.
கதாநாயகர்கள் : சம்பத் கேரக்டரில் வரும் குரு சோமசுந்தரம் ., வில்லனிக் ஹீரோவாக தனது வித்தியாசமான நடை , உடை , பாவனைகள் நிரம்பிய நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார்.... என்றாலும் ., போதை மருந்து கடத்தல் தாதா ,டான் ..எனும் இந்த கேரக்டருக்கு அவர் அவ்வளவு பொருத்தமாக இல்லை ... என்பதே உண்மை. க்ளைமாக்ஸில் , துரைராஜும் இவர்தான் என சொல்வார்கள் என்பதை முன் கூட்டியே சாமான்ய ரசிகனாலும் யூகிக்க முடிவது இவரது பாத்திரத்திற்கும் , படத்திற்கும் பெரும் பலவீனம்.
மற்றொரு நாயகர் சண்முகம் ' அலைஸ்' சாம் கதாபாத்திரத்தில் வரும் சிபி சந்திரனின் கேரக்டரே வித்தியாசமானது. பெரும்பாலான நேரம் மப்புடன், எந்த விஷயத்தையும் கூலாக அணுகும் கதாபாத்திரத்தை சிபி ., செமயாய் செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும் .
மூன்றாம் நாயகர் :சண்முகம் ' அலைஸ்' சாம் கதாபாத்திரத்தில் வரும் சிபி சந்திரனை காப்பாற்றும்
பத்திரிகை நிருபர் விசாகனாக வரும் ,விசாகன் சூலூர் வணங்காமுடியும் தானும் சளைத்தவர்அல்ல .. என தன் காட்சிகளில் நிருபிக்க முயன்றிருக்கிறார்.
கதாநாயகியர் : வித்தியாசமான கதைகளையும் , கெட்டத்தனமான பாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கும் சாந்தினி தமிழரசனுக்கு இந்த படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரமே. மைதிலி எனும் அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை ரொம்ப சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவரை மாதிரியே இன்னொரு நாயகியாக வந்து கொலை குற்றத்தை விசாரிக்கும் பெண்பத்திரிகையார் சம்யுக்தாவாக அனிஷா ஆம்ப்ரூஸ் தன் அழகால் அசரடிக்கிறார்.
பிற நட்சத்திரங்கள் மாறன் -ஜான் விஜய், முன்னாள் போலீஸ் மஹாலிங்கம் -அழகம்பெருமாள், பாலசுப்ரமணியம் -ஜெயப்பிரகாஷ் இன்ஸ்" நீலமேகம் -, வாசு விக்ரம், ஜார்ஜ் - ஹரிஷ் பெரேடி ,
கான்ஸ்டபிள் -"பிச்சைக்காரன்" மூர்த்தி , தீனதயாளன் - ரவீந்தர் , கிரிஷ் -ப்ரவின் ராஜா , ரேணுகாதேவி -ப்ரித்திகிச்சப்பன் உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
தொழில்நுட்பகலைஞர்கள் : ஆண்டனியின் படத்தொகுப்பில் இன்னும் கத்திரி வேலை செய்திருக்கலாம். இந்த கதைக்கு 2.45 மணிநேரம் தேவையில்லை. ரோட்ரிகோ டெல்ரியோ ஹெரெரா ஓளிப்பதிவில், ஒரு குறையுமில்லை
சாம்.சி.எஸ் . பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். " நானே கண்ணாடி நெஞ்சன் .. " , "தீயாய் நீ ....." உள்ளிட்ட பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
பலம் : ஓரின சேர்க்கைக்யாளர்களுக்கு, கோர்ட் ஆதரவு அளித்திருக்கும் இச்சூழலில் அது சம்பந்தப்பட்ட கதையம்சத்துடன் "வஞ்சகர் உலகம்' வெளிவந்திருப்பது பலம்.
அதே போன்று ,"ஏதாவது கெட்டது நடக்குதுன்னா நாய்க்கும் , பொண்ணுக்கும் தான் தெரியுமாம். ....", "போலீஸ்காரனுக்கு சில விஷயம்தான் தெரியும் .பத்திரிகை காரனுக்கு பல விஷயம் தெரியும் ", "தப்பு பண்ணனும்னாலும் கரெக்ட்டா பண்ணினா தான் ஜெயிக்க முடியும் ." , "ட்ரக்ல சாவறதை விட , உங்க அரசாங்க பர்மிஷன்ல விற்கப்படுற சாக்லெட் சிகரெட் எல்லாம் எத்தனை பேரை கொல்லுது தெரியுமா ..?" என்பது உள்ளிட்ட படம் முழுக்க ஒவ்வொரு கேரக்டராலும் போகும் போக்கில் அடிக்கப்படும் "பன்ச் "கள் ஹாஸ்யம். சுவாரஸ்யம் கூடவே பெரும் பலம்
பலவீனம் : நீள நீளமான காட்சிகளும் , 2.45 மணி நேர பெரிய படம். இது என்பதும் பலவீனம்.
இயக்கம் :மனோஜ் பீதா, தனது இயக்கத்தில்.,தமிழ் சினிமாவுக்கு மாறுபட்ட கோணத்திலும், முற்றிலும் புதுவிதமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் சிறப்பாக வேலைவாங்கியிருக்கிறார்... என்றாலும் ., படிக்கும் போது ஹாஸ்டலில். ஹோமோ செக்ஸில் ஈடுபட்ட குருவை மாணவர்கள் அவமானப்படுத்திட ., அதற்காக அவர் ., முகத்தை காட்டிக் கொள்ளாமல் போதை மருந்து கடத்தலில் இறங்கி ., எதிர்பவர்களை போட்டுத்தள்ளுவதும் ., தன் ஹோமோ நண்பனுக்கு அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதும் ., அதனால் நண்பனின் மனைவி தடம் மாறுவதால் அவரை தீர்த்து கட்டி விட்டு பழி வேறு ஒருவர் மீது வரும் படி செய்வதும் நம்மூருக்கு ஒத்து வருமா ? தெரியவில்லை.
மேலும் , காட்சிகளில் ஒரு கோர்வை இல்லாதது ., படம் பார்க்கும் ரசிகனுக்கு
பெரும் அயர்ச்சியையும் , அதிர்ச்சியையும் உண்டாக்குகிறது. இப்படத்தின் பெரிய நீளமும், காட்சியின் நீள நீளமுமே அதற்கு முக்கியக்காரணம் .
பைனல் "பன்ச் " : "வஞ்சகர் உலகம்' - ரசிகர்களை 'வஞ்சித்த உலகம்!
கதை : சுணவன் மனைவியான சாந்தினி தமிழரசன் - ஜெயப்பிரகாஷ் இடையே ஒரு விதமான மனஸ்தாபம்.. இவர்களது வீட்டிற்கு எதிர் வாடையில் இருக்கும் இவர்களது இன்னொரு வீட்டில் , வாடகைக்கு வசித்து வருகிறார் சிபி புவனசந்திரன். எப்போதும் குடி போதையிலேயே இருக்கும் சிபி .,பத்திரிகை அலுவலகம் ஒன்றில் டெக்னிக்கல் பிரிவில் வேலை பார்க்கிறார்.
இந்நிலையில் ஒருநாள், குடி போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் சிபியை போலீசார் தேடி வந்து தட்டி எழுப்புகின்றனர். வீட்டு உரிமையாளர் சாந்தினி கொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும், அந்த கொலையில், சிபி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரை விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். இதையடுத்த சிபி பணிபுரியும் பத்திரிகை நிறுவனத்தின் .நிருபர் மற்றும் உரிமையாளரின் உதவியுடன் சிபிவெளியே வருகிறார்.
இதையடுத்து இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்குகின்றனர். மற்றொரு பக்கம் ,அந்த கொலைக்கும் ,பெரிய போதை மருந்து கடத்தல் தாதாவுக்கும் தொடர்பு இருப்பதாக கருதுகின்ற சிபி வேலை செய்யும் பத்திரிகை நிறுவனமும் அது குறித்து துப்பு துலக்க ஆரம்பிக்கிறது.
பொறுப்பில்லாத போலீசாரின் விசாரணையில் ஒரு தரப்பின் மீதும், பத்திரிகையாளர் விசாரணையில் வேறொரு தரப்பின் மீதும் ஆழ்ந்த சந்தேகம் ஏற்படுகிறது.
கடைசியில் அந்த கொலையை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே "வஞ்சகர் உலகம்." படத்தின் கதையும் களமும் ஆகும்.
காட்சிப்படுத்தல் : "ஜோக்கர் "நாயகர் குருசோம கந்தரத்துடன்., சிபி புவன சந்திரன், விசாகன் சூலூர் வணங்காமுடி,
சாந்தினி தமிழரசன் , அனிஷாஆம்ப்ரூஸ், ஹரிஷ் பெரேடி , ஜெயப்பிரகாஷ்,ஜான்விஜய், அழகம்பெருமாள், வாசு விக்ரம், "பிச்சைக்காரன்" மூர்த்தி , ரவீந்தர், ப்ரவின் ராஜா , ப்ரித்திகிச்சப்பன் உள்ளிட்டோர் நடிக்க ., ஆண்டனியின் படத்தொகுப்பில் ரோட்ரிகோ டெல்ரியோ ஹெரெரா ஓளிப்பதிவில், சாம்.சி.எஸ் இசையில், மனோஜ் பீதா இயக்கத்தில்
தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய கதை மற்றும் சதை (!) யம்சத்துடன் வெளிவந்திருக்கும் "வஞ்சகர் உலகம்." படந்தில் பெரும்பாலான காட்சிகள் ரொம்பவும் நீள நீளமான காட்சிப்படுத்தல்களாக இருப்பது ரசிகனுக்கு சேர்வை தருகின்றன எல்லாம்.
கதாநாயகர்கள் : சம்பத் கேரக்டரில் வரும் குரு சோமசுந்தரம் ., வில்லனிக் ஹீரோவாக தனது வித்தியாசமான நடை , உடை , பாவனைகள் நிரம்பிய நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார்.... என்றாலும் ., போதை மருந்து கடத்தல் தாதா ,டான் ..எனும் இந்த கேரக்டருக்கு அவர் அவ்வளவு பொருத்தமாக இல்லை ... என்பதே உண்மை. க்ளைமாக்ஸில் , துரைராஜும் இவர்தான் என சொல்வார்கள் என்பதை முன் கூட்டியே சாமான்ய ரசிகனாலும் யூகிக்க முடிவது இவரது பாத்திரத்திற்கும் , படத்திற்கும் பெரும் பலவீனம்.
மற்றொரு நாயகர் சண்முகம் ' அலைஸ்' சாம் கதாபாத்திரத்தில் வரும் சிபி சந்திரனின் கேரக்டரே வித்தியாசமானது. பெரும்பாலான நேரம் மப்புடன், எந்த விஷயத்தையும் கூலாக அணுகும் கதாபாத்திரத்தை சிபி ., செமயாய் செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும் .
மூன்றாம் நாயகர் :சண்முகம் ' அலைஸ்' சாம் கதாபாத்திரத்தில் வரும் சிபி சந்திரனை காப்பாற்றும்
பத்திரிகை நிருபர் விசாகனாக வரும் ,விசாகன் சூலூர் வணங்காமுடியும் தானும் சளைத்தவர்அல்ல .. என தன் காட்சிகளில் நிருபிக்க முயன்றிருக்கிறார்.
கதாநாயகியர் : வித்தியாசமான கதைகளையும் , கெட்டத்தனமான பாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கும் சாந்தினி தமிழரசனுக்கு இந்த படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரமே. மைதிலி எனும் அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை ரொம்ப சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவரை மாதிரியே இன்னொரு நாயகியாக வந்து கொலை குற்றத்தை விசாரிக்கும் பெண்பத்திரிகையார் சம்யுக்தாவாக அனிஷா ஆம்ப்ரூஸ் தன் அழகால் அசரடிக்கிறார்.
பிற நட்சத்திரங்கள் மாறன் -ஜான் விஜய், முன்னாள் போலீஸ் மஹாலிங்கம் -அழகம்பெருமாள், பாலசுப்ரமணியம் -ஜெயப்பிரகாஷ் இன்ஸ்" நீலமேகம் -, வாசு விக்ரம், ஜார்ஜ் - ஹரிஷ் பெரேடி ,
கான்ஸ்டபிள் -"பிச்சைக்காரன்" மூர்த்தி , தீனதயாளன் - ரவீந்தர் , கிரிஷ் -ப்ரவின் ராஜா , ரேணுகாதேவி -ப்ரித்திகிச்சப்பன் உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
தொழில்நுட்பகலைஞர்கள் : ஆண்டனியின் படத்தொகுப்பில் இன்னும் கத்திரி வேலை செய்திருக்கலாம். இந்த கதைக்கு 2.45 மணிநேரம் தேவையில்லை. ரோட்ரிகோ டெல்ரியோ ஹெரெரா ஓளிப்பதிவில், ஒரு குறையுமில்லை
சாம்.சி.எஸ் . பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். " நானே கண்ணாடி நெஞ்சன் .. " , "தீயாய் நீ ....." உள்ளிட்ட பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
பலம் : ஓரின சேர்க்கைக்யாளர்களுக்கு, கோர்ட் ஆதரவு அளித்திருக்கும் இச்சூழலில் அது சம்பந்தப்பட்ட கதையம்சத்துடன் "வஞ்சகர் உலகம்' வெளிவந்திருப்பது பலம்.
அதே போன்று ,"ஏதாவது கெட்டது நடக்குதுன்னா நாய்க்கும் , பொண்ணுக்கும் தான் தெரியுமாம். ....", "போலீஸ்காரனுக்கு சில விஷயம்தான் தெரியும் .பத்திரிகை காரனுக்கு பல விஷயம் தெரியும் ", "தப்பு பண்ணனும்னாலும் கரெக்ட்டா பண்ணினா தான் ஜெயிக்க முடியும் ." , "ட்ரக்ல சாவறதை விட , உங்க அரசாங்க பர்மிஷன்ல விற்கப்படுற சாக்லெட் சிகரெட் எல்லாம் எத்தனை பேரை கொல்லுது தெரியுமா ..?" என்பது உள்ளிட்ட படம் முழுக்க ஒவ்வொரு கேரக்டராலும் போகும் போக்கில் அடிக்கப்படும் "பன்ச் "கள் ஹாஸ்யம். சுவாரஸ்யம் கூடவே பெரும் பலம்
பலவீனம் : நீள நீளமான காட்சிகளும் , 2.45 மணி நேர பெரிய படம். இது என்பதும் பலவீனம்.
இயக்கம் :மனோஜ் பீதா, தனது இயக்கத்தில்.,தமிழ் சினிமாவுக்கு மாறுபட்ட கோணத்திலும், முற்றிலும் புதுவிதமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் சிறப்பாக வேலைவாங்கியிருக்கிறார்... என்றாலும் ., படிக்கும் போது ஹாஸ்டலில். ஹோமோ செக்ஸில் ஈடுபட்ட குருவை மாணவர்கள் அவமானப்படுத்திட ., அதற்காக அவர் ., முகத்தை காட்டிக் கொள்ளாமல் போதை மருந்து கடத்தலில் இறங்கி ., எதிர்பவர்களை போட்டுத்தள்ளுவதும் ., தன் ஹோமோ நண்பனுக்கு அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதும் ., அதனால் நண்பனின் மனைவி தடம் மாறுவதால் அவரை தீர்த்து கட்டி விட்டு பழி வேறு ஒருவர் மீது வரும் படி செய்வதும் நம்மூருக்கு ஒத்து வருமா ? தெரியவில்லை.
மேலும் , காட்சிகளில் ஒரு கோர்வை இல்லாதது ., படம் பார்க்கும் ரசிகனுக்கு
பெரும் அயர்ச்சியையும் , அதிர்ச்சியையும் உண்டாக்குகிறது. இப்படத்தின் பெரிய நீளமும், காட்சியின் நீள நீளமுமே அதற்கு முக்கியக்காரணம் .
பைனல் "பன்ச் " : "வஞ்சகர் உலகம்' - ரசிகர்களை 'வஞ்சித்த உலகம்!
Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review